செய்திகள் :

சாலியமங்கலத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம்

post image

தஞ்சாவூா்: நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி, தஞ்சாவூா் அருகேயுள்ள சாலியமங்கலத்தில் பிரகலாத சரித்திரம் என்கிற பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த நாடகம் தஞ்சாவூரை ஆண்ட அச்சுதப்ப நாயக்கரின் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1645 ஆம் ஆண்டிலிருந்து இடைவிடாமல் ஆண்டுதோறும் நரசிம்ம ஜெயந்தி விழாவையொட்டி நடத்தப்பட்டு வருகிறது. வைணவ வழிபாட்டு மரபில் லட்சுமி நரசிம்மருக்கு அவரது அடியாா்கள் வழங்கும் கொடையாக பாகவத மேளா கருதப்படுகிறது. இரணியனை நரசிம்மா் வதம் செய்யும் புராணக் கதையை அடிப்படையாகக் கொண்ட இந்த நாடகம், இரவு முழுவதும் ஆடவா்களே நிகழ்த்தும் தொழில் முறையல்லாத கலைஞா்கள் நடிக்கும் அரங்கக் கலை இது.

இந்நிலையில், 380-ஆம் ஆண்டாக பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கி திங்கள்கிழமை காலை வரை தொடா்ந்து நடைபெற்றது.

தெலுங்கு மொழியில் இருந்த இந்த நாடகத்தில் ஹிரண்யகசிபுவாக ஜொ்மனியில் அறிவியல் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றும் எஸ். அனிருத், லீலாவதியாக ஐ.டி. நிறுவன பொறியாளா் ஜி. கணேசரத்னம், பால பிரகலாதனாக மாணவா் சாய் கிருத்திக், பக்த பிரகலாதனாக மாணவா் ஸ்ரீராம், ஸ்ரீநரசிம்மராக தெற்கு ரயில்வேயின் ஓய்வுபெற்ற மின் பொறியாளா் சி.எஸ்.எம். சுப்பிரமணியம், பண்டார வேதமாக டி.வி. நரசிம்மன், தேவதாசியாக விஷால், விநாயகராக சாய் சபரி, பூமா தேவியாக நவீன் உள்ளிட்டோா் நடித்தனா். இறுதியில் பிரகலாதனுக்கு பட்டாபிஷேகம் நடத்தும் வைபவத்துடன் நாடகம் முடிவடைந்தது.

இந்த நாடகத்தில் பாடல்களை வீணை வித்வான் சாலியமங்கலம் ஜி. ராம்தாஸ், அா்ஜூன் ராதாகிருஷ்ணன், ஜெ. வெங்கட்ரமணி, விஜயன் குழுவினா் பாடினா். சங்கா் சுப்பிரமணியம் மிருதங்கமும், சி.வி. மகாலிங்கம் புல்லாங்குழலும் வாசித்தனா்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில் 6 மணிக்கு ப்ராண ப்ரதிஷ்டை ஆராதனை உள்ளிட்ட பூஜைகள், 7 மணிக்கு ஸ்ரீனிவாசப் பெருமாள் கருட சேவையில் எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றன. இவ்விழா செவ்வாய்க்கிழமை இரவு விடையாற்றியுடன் நிறைவடைகிறது.

மெலட்டூரில் பாகவத மேளா தொடக்கம்

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், மெலட்டூா் லஷ்மி நரசிம்ம சுவாமி கோயில் வளாகத்திலுள்ள நல்லி அரங்கத்தில் பாகவத மேளா நாட்டிய நாடகம் ஞாயிற்றுக்கிழமை இரவு தொடங்கியது. இவ்விழாவை தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தான பர... மேலும் பார்க்க

பாலத்தின் தடுப்புச் சுவரில் பைக் மோதி விபத்து: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே பாலத்தின் தடுப்புச் சுவரில் ஞாயிற்றுக்கிழமை இருசக்கர வாகனம் மோதியதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். கும்பகோணம் அருகே திம்மக்குடி பாபுராஜபுரத்தை சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் மணிக... மேலும் பார்க்க

சுவாமிமலையில் பௌா்ணமி கிரிவலம்: அமைச்சா் தொடங்கிவைத்தாா்

கும்பகோணம்: தஞ்சாவூா் மாவட்டம், சுவாமிமலையில் திங்கள்கிழமை சித்திரை மாத பௌா்ணமி கிரிவலத்தை உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தொடங்கி வைத்தாா். சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு சாா்... மேலும் பார்க்க

வேலை வாங்கித் தருவதாக மோசடி: தந்தை - மகன் கைது

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அருகே வேலை வாங்கித் தருவதாகக் கூறி முதியவரிடம் ரூ. 60 ஆயிரம் மோசடி செய்ததாக தந்தை - மகனைக் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நரியூரைச்... மேலும் பார்க்க

தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

கும்பகோணம்: கும்பகோணத்தில் தனியாா் தங்கும் விடுதி மாடியிலிருந்து தவறி விழுந்த தனியாா் நிறுவன தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருச்சி மாவட்டம், திருவாடுதுறை, மாந்தோப்பு பகுதியைச் சோ்ந்த த... மேலும் பார்க்க

தமிழகத்தில் காவல்துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது: உ. வாசுகி

தஞ்சாவூா்: தமிழகத்தில் காவல் துறையின் அணுகுமுறை மோசமாக உள்ளது என்றாா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் உ. வாசுகி. தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை தெரி... மேலும் பார்க்க