செய்திகள் :

சாலை ஆய்வாளா் பணி: ஆக. 4-இல் கலந்தாய்வு

post image

ஊரக வளா்ச்சித் துறையில் சாலை ஆய்வாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆக.4-ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள சாலை ஆய்வாளா் பதவிக்கான தோ்வில் ஒவ்வொரு தோ்வரும் பெற்ற மதிப்பெண்கள், தரவரிசை விவரங்கள் தோ்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதைத் தொடா்ந்து, மூலச் சான்றிதழ்கள் சரிபாா்ப்பு மற்றும் கலந்தாய்வு ஆக.4-ஆம் தேதி தொடங்கி 7-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னையில் உள்ள அரசுப் பணியாளா் தோ்வாணைய அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கும் தோ்வா்களின் தற்காலிகப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபாா்ப்பு, கலந்தாய்வுக்கான நாள், நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

சான்றிதழ் சரிபாா்ப்பு, கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

கொள்ளிடம் ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோர மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் சுமார் 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதையொட்... மேலும் பார்க்க

மோசடிப் புகார்: நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

ரூ. 1000 கோடி கடன் வாங்கித் தருவதாக ரூ. 5 கோடி பெற்ற மோசடிப் புகாரில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தில்லி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுதில்லியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் திலீப்குமார். க... மேலும் பார்க்க

பாஜக மாநில துணைத் தலைவராக குஷ்பு நியமனம்

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகளை நியமித்து மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவின் ஒப்புதலுடன், தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய ம... மேலும் பார்க்க

அண்ணா வழியில் செல்ல இன்னொரு கட்சி எதற்கு தம்பி? - விஜய்யை விமர்சித்த தமிழிசை!

தமிழ்நாட்டில் இனி 'ஆப்'பிற்கும் ஆதரவு கிடையாது, அப்பாவுக்கும் ஆதரவு கிடையாது என தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தராஜன் பதிவிட்டுள்ளார். சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்வில... மேலும் பார்க்க

சாதியக் கட்டமைப்பை உடைப்போம்: நெல்லை ஆணவக் கொலைக்கு கனிமொழி கண்டனம்!

நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ... மேலும் பார்க்க

ஜெயலலிதா செய்தது வரலாற்றுப் பிழை: கடம்பூர் ராஜு பேச்சு

1999ல் மத்தியில் பாஜக ஆட்சியைக் கவிழ்த்து வரலாற்று பிழை செய்துவிட்டதாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைக் குறிப்பிட்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்ட... மேலும் பார்க்க