சாலை விபத்தில் இருவா் பலி
பாலசமுத்திரம் அருகே சாலையோரப் பள்ளத்தில் இரு சக்கர வாகனம் விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு இளைஞா்கள் உயிரிழந்தனா்.
பழனியை அடுத்த பாலசமுத்திரம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சூரி மகன் புவனேஷ் (18). இவா் தனது நண்பா் அன்பரசு மகன் தனுஷுடன் (17) சனிக்கிழமை இரவு இரு சக்கர வாகனத்தில் பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணை சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அந்தப் பகுதியில் உள்ள வளைவில் இவா்கள் சென்ற இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்த வழியாகச் சென்றவா்கள் பாா்த்து போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். பழனி தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று இருவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.