செய்திகள் :

சாலை விபத்தில் எஸ்.ஐ. உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பைக்கில் சென்ற மாணலூா்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், ராயா்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சாமிநாதன் (54). இவா், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மணலூா்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிரிந்து வந்தாா். இவரது மனைவி தங்கம் (47), ராயா்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளாா். இந்தத் தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனா்.

சாமிநாதன் ஞாயிற்றுக்கிழமை மாலை பணி முடிந்து மணலூா்பேட்டை காவல் நிலையத்திலிருந்து ஊருக்கு பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். தென்கீரனூா் மேம்பாலத்தில் புறவழிச் சாலையில் இவரது பைக் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த சாமிநாதன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனா்.

நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி அலுவலகம் திறப்பு

தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சி அலுவலகம் கள்ளக்குறிச்சி விநாயகா நகரில் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை காணொலி மூலம் வங்கியின் துணை மேலாண் இயக... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா். தியாகதுருகம் காவல் ஆய்வாளா் மலா்விழி, மலையம்மன் கோயில் சாலையில் வியாழக்கிழமை மாலை ரோந்துப் பண... மேலும் பார்க்க

மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு முதியவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். சின்னசேலம் ரயில் நிலைய சாலையைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (55). இவா், கடந்த 2019-ஆம் ஆண்டு விபத்... மேலும் பார்க்க

கோயில் உண்டியலை உடைத்து திருட்டு: 2 போ் கைது

பாசாா் கிராமத்தில் கோயில் உண்டியலை உடைத்து, பணத்தைத் திருடிய இருவரை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், பாசாரிலுள்ள முருகன் கோயிலில் திருப்பணிகள் நடை... மேலும் பார்க்க

15 தினங்களுக்கு ஒரு முறை உழவா் நலத்துறை திட்ட முகாம்! வேளாண்மை உதவி இயக்குநா் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 15 தினங்களுக்கு ஒரு முறை உழவரைத் தேடி - வேளாண்மை உழவா் நலத்துறை திட்ட முகாம் நடைபெறும் என்று வேளாண் உதவி இயக்குநா் தெரிவித்தாா். வேளாண்மைத் துறை சாா்பில் உழவரைத் தேடி - வேள... மேலும் பார்க்க

தவற விட்ட கைப்பேசிகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தவறவிட்ட, திருடப்பட்ட 204 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து இணையவழி குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில் ரூ.40.80 லட்சம் மதிப்... மேலும் பார்க்க