செய்திகள் :

சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் தேர்வு எழுதிய மாணவன்: நெகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!

post image

மதுரை: மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்திற்காக காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதி கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்

தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், முதல் நாள் நடைபெறும் தமிழ் மொழித் தேர்வை கடுமையான காயங்களுடன் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதி வருகிறார்.

சிறு வயதிலயே தந்தையை இழந்த தினேஷ், நன்கு படிக்கும் என்ற கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசை நிறைவேற்றுவதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலையாகி ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது!

மகாராஷ்டிரத்தில் சிறையிலிருந்து ஜாமினில் வெளியானவுடன் ரீல்ஸ் விடியோ வெளியிட்ட நபர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுமித் தாக்கூர் என்ற நபர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈ... மேலும் பார்க்க

ஆக்ஸ்போர்டு பல்கலையில் உரையாற்றும் முதல்வர் மமதா!

லண்டனிலுள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முதல்வர் மமதா பானர்ஜி உரையாற்றவுள்ளார்.பிரிட்டனின் வரலாற்று சிறப்புமிக்க கல்வி நிறுவனமான ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கத்தின் முத... மேலும் பார்க்க

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரியரை கைது செய்த சிபிஐ!

இ-மெயில் மோசடி வழக்கில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவரை மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.கடந்த 2011 ஆம் ஆண்டு ஒரு நபருக்கு இ-மெயில் மூலமாக வந்த செய்தியில் அவர் ஆர்தோடாக்ஸ் சர்ச்... மேலும் பார்க்க

மாணவர் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் குண்டுவெடிப்பு!

பிகார் மாநிலத்தின் பாட்னா பல்கலைக்கழக வளாகத்தினுள் குண்டு வெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. பாட்னா பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தேர்தல் இன்னும் சில நாள்களில் அங்கு நடைபெறவுள்ள நிலையில் இன்று (மார்ச்.5... மேலும் பார்க்க

நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 வீரர்கள் படுகாயம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு வெடிப்பில் 3 பாதுகாப்புப் படை வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.பலிவா பகுதியில் மனோஹர்பூர் காவல் நிலையத்திற்கு உள்பட்ட சரந்தா வனப்பகுதியி... மேலும் பார்க்க

விரைவில் மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகம் திறக்கப்படும்: முதல்வர் அறிவிப்பு!

மத்தியப் பிரதேசத்தின் 9வது புலிகள் காப்பகம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்டத்தில் அம்மாநிலத்தின் 9வது புலிகள் காப்பகமா... மேலும் பார்க்க