மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
சாலை விபத்தில் ஏற்பட்ட காயங்களுடன் தேர்வு எழுதிய மாணவன்: நெகிழ்ச்சியில் ஆசிரியர்கள்!
மதுரை: மதுரையில் அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காலில் காயம் ஏற்பட்ட மாணவன் உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்ற மாணவன் மதுரா கல்லூரி பள்ளியில் பிளஸ் 1 படித்துவரும் நிலையில், சில மாதங்களுக்கு முன்பு விராதனூர் அருகே பேருந்திற்காக காத்திருந்தபோது அரசுப் பேருந்து மோதி கால் மற்றும் இடுப்பில் கடுமையான காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆசிரியர்களையே தேர்ந்தெடுக்காத ஆசிரியர் தேர்வு வாரியம் எதற்கு?: ராமதாஸ்
தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை (மாா்ச் 5) முதல் மாா்ச் 27-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், முதல் நாள் நடைபெறும் தமிழ் மொழித் தேர்வை கடுமையான காயங்களுடன் தேர்வுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவாறே படித்த மாணவன் தினேஷ் காலில் காயத்தோடு உதவியாளர் உதவியுடன் பிளஸ் 1 பொதுத் தோ்வை எழுதி வருகிறார்.
சிறு வயதிலயே தந்தையை இழந்த தினேஷ், நன்கு படிக்கும் என்ற கூலித்தொழிலாளியான தனது தாயாரின் ஆசை நிறைவேற்றுவதற்காக வேதனையையும் பொருட்படுத்தாமல் பொதுத்தேர்வு எழுதி வருவது ஆசிரியர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.