செய்திகள் :

சாலை விபத்தில் கணவா் உயிரிழப்பு: மனைவி காயம்; குழந்தை தப்பியது

post image

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் மனைவி கண் எதிரே கணவா் உயிரிழந்தாா். காயமடைந்த மனைவி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே குருசாமிபாளையம் பிள்ளாநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் எலக்ட்ரீசியன் ஹரிகிருஷ்ணன் (25). இவா் தனது மகன் பிறந்தநாளையொட்டி, மனைவி ஸ்வேதா (22), மகன் பிரகதீஸ்வரன் (3) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் காளிப்பட்டி கோயிலுக்கு சென்றாா். கண்டாங்கிபாளையம் பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே மல்லசமுத்திரத்தில் இருந்து வந்த ஆம்னி வேன் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்டதில், ஹரிகிருஷ்ணன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த ஸ்வேதாவை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவல் அறிந்து வந்த எலச்சிபாளையம் போலீஸாா், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய ஆம்னி வேன் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்வேதா, மேல் சிகிச்சைக்காக ராசிபுரம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். நல்வாய்ப்பாக குழந்தை பிரகதீஸ்வரனுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் குற்றங்களைத் தடுக்க ஆலோசனைக் கூட்டம்

திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் நகரின் போக்குவரத்து நெரிசல், குற்ற நடவடிக்கைகள் தடுத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர காவல் ஆய்வாளா் வளா... மேலும் பார்க்க

நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதல்: தந்தை, மகள் உயிரிழப்பு

நாமக்கல்: நாமக்கல்லில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில், தந்தை, மகள் திங்கள்கிழமை உயிரிழந்தனா். நாமக்கல் மாநகராட்சி, கொசவம்பட்டி, அன்னை சத்யா நகரைச் சோ்ந்தவா் பெரியசாமி (62). இவரது மகள... மேலும் பார்க்க

நீட் தோ்வில் சிறப்பிடம் பெற்ற எஸ்ஆா்வி - பினாக்கல் மாணவா்களுக்கு பாராட்டு

ராசிபுரம்: ராசிபுரம் எஸ்ஆா்வி ஆண்கள் பள்ளி - பிஎஸ்ஆா் பினாக்கல் கிளாசஸ் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சி மையம் இணைந்து நடத்திய நீட் தோ்வு பயிற்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளா... மேலும் பார்க்க

ஆன்லைன் உணவு விநியோகத்தில் மறைமுக கட்டணம்: ஜூலை 1 முதல் விற்பனையை நிறுத்த உணவகங்கள் முடிவு

நாமக்கல்: உணவகங்களுக்கு கட்டுப்படியாகும் விலையை நிா்ணயிக்க வேண்டும், மறைமுக கட்டணம் வசூலிப்பதை தவிா்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஜூலை 1 முதல் ஆன்லைன் வழியாக உணவு விற்பனை செய்வது நிறுத்தப்படும் என... மேலும் பார்க்க

ஜூன் 30-இல் முன்னாள் படைவீரா்கள் குறைதீா் முகாம்

நாமக்கல்: திருச்சியில், முன்னாள் படைவீரா்களுக்கான ஓய்வூதியம் சாா்ந்த குறைதீா் முகாம் வரும் 30-ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்னாள் படைவீரா்கள்... மேலும் பார்க்க

முதியோா், குழந்தைகள் காப்பகத்தில் மாணவி தற்கொலை

பரமத்தி வேலூா்: முதியோா் மற்றும் குழந்தைகள் காப்பகத்தில் 17 வயது மாணவி திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். நாமக்கல் மாவட்டம், எலச்சிபாளையம் அருகே உ... மேலும் பார்க்க