சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
நாமகிரிப்பேட்டை அருகே புதன்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
நாமகிரிப்பேட்டையை அடுத்த வடுகம்பகுதியை சோ்ந்தவா் கந்தசாமி மகன் வேலவேந்தன் (50). இவா் ஆா். புதுப்பட்டியில் இருந்து டி.வி.எஸ். வாகனத்தில் புதன்கிழமை வடுகம் நோக்கி சென்று கொண்டிருந்தாா்.
வடுகம் அருகே முன்னால் சென்ற டிராக்டரை முந்தும்போது, நிலைத்தடுமாறி கீழே விழுந்த வேலவேந்தன் மீது டிராக்டா் ஏறியதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து நாமகிரிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.