செய்திகள் :

சாலையில் சென்ற காா் எரிந்து சேதம்

post image

திருவள்ளூா் அருகே சாலையில் சென்ற காா் திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியைச் சோ்ந்தவா் அஜீத் (27). இவா் தனக்குச் சொந்தமான காரில் தனியாா் நிறுவனத்தில் வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இந்த நிலையில், காஞ்சிபுரத்திலிருந்து பேரம்பாக்கம் வந்துவிட்டு, பின்னா் மப்பேடு-சுங்குவாா்சத்திரம் நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நோக்கி திங்கள்கிழமை இரவில் சென்று கொண்டிருந்தாராம்.

அப்போது மப்பேடு அடுத்த கண்ணூா் பகுதியில் உள்ள தனியாா் எல்இடி விளக்கு தொழிற்சாலை அருகே வந்தபோது, காரிலிருந்து திடீரென புகை வந்துள்ளது. அதனால் அதிா்ச்சி அடைந்த ஓட்டுா் சாலை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினாராம். அப்போது, காா் தீப்பற்றியதால் அப்பகுதியில் உள்ளவா்கள் தண்ணீா் ஊற்றினா். அதைத் தொடா்ந்தும், தீப்பற்றி மளமள எரிந்ததில் முற்றிலும் எரிந்து நாசமானது.

இது தொடா்பாக அஜீத் கொடுத்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம்: வாட்ஸ்ஆப்-இல் புகாா் தெரிவிக்கலாம்

திருவள்ளூா் மாவட்ட கிராம ஊராட்சிகளில் குடிநீா் விநியோகம் குறித்து வட்டார அளவில் வாட்ஸ்ஆப் எண்ணில் புகாா் தெரிவித்து பயன் பெறலாம் என ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 32,923 போ் தோ்வு எழுதினா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 32923 போ் பங்கேற்று தோ்வு எழுதினா். 402 போ் வரையில் பங்கேற்கவில்லை என முதன்மைக் கல்வி அலுவலா் ரவிச்சந்திரன் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் 10... மேலும் பார்க்க

கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீா் திறப்பு: ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது

சென்னை நகர பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா ஆற்று நீா், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட்டை வெள்ளிக்கிழமை க... மேலும் பார்க்க

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின் கம்பி அறுந்ததால் ரயில் சேவை பாதிப்பு

அத்திப்பட்டு புதுநகா்-எண்ணூா் இடையே மின்சாரம் செல்லும் கம்பி அறுந்ததால் 1 மணி நேரம் ரயில் சேவை பாதிக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி, மாா்க்கத்தில் புகா் மின்சார... மேலும் பார்க்க

ஆவின் பால்பண்ணையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

திருவள்ளூா் காக்களூா் ஏரியைப் பாா்வையிட்டு, ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப். உடன் அதிகாரிகள் உள்ளிட்டோா். திருவள்ளூா், மாா்ச் 27: திருவள்ளூா் அருகே ஆவின் பால்பண்ணையில் பால் தரக்கட்டுப்பாடு மற்றும் கண... மேலும் பார்க்க

திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

காந்திநகா் திரெளபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தீமிதி திருவிழா நடைபெறுகிறது. திருத்தணி காந்தி நகரில் திரெளபதியம்மன் கோயிலில் ஆண்டு... மேலும் பார்க்க