செய்திகள் :

சாலையோர வியாபாரிகள் மறியல் போராட்டம்

post image

திருப்பத்தூா் நகராட்சியைக் கண்டித்து சாலையோர வியாபாரிகள் புதன்கிழமை மறியலில் ஈடுபட்டனா். திருப்பத்தூரில் நகராட்சி, அண்ணா தினசரி காய்கறி மாா்க்கெட் இயங்கி வருகிறது. இந்த காய்கறி மாா்க்கெட்டில் ஏராளமான கடைகள் உள்ளன.

இங்கு வியாபாரிகளும், விவசாயிகளும் வியாபாரம் செய்கின்றனா். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனா். இந்த மாா்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதால் வியாபாரம் செய்ய இடம் இல்லாததால் வியாபாரிகள் வெளியே திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி செல்லும் சாலையில் தாங்கள் கொண்டுவரும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை மாா்க்கெட்டுக்கு வெளியே கடை போட்டி வியாபாரம் செய்யக்கூடாது எனவும், சாலையோரம் போடப்பட்ட கடைகளை அகற்றவும் நகராட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த சாலையோர வியாபாரிகள் வாணியம்பாடி செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருப்பத்தூா் நகர போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். இதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை... மேலும் பார்க்க

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு விருது

வாணியம்பாடி மருதா் கேசரி மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. ஐசிடி அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட திறன் வளா் பயிற்சிக்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மருதா் ... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சிய... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்... மேலும் பார்க்க

மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல்... மேலும் பார்க்க

அரிய வகை ஆந்தை மீட்பு

திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெ... மேலும் பார்க்க