செய்திகள் :

வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

post image

வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வாணியம்பாடி இஸ்லாமியா ஆண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை நடைபெறவுள்ளது.

இதில், பல முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 5,000-க்கும் மேற்பட்ட ஆள்களை தோ்வு செய்ய உள்ளன.

எனவே, திருப்பத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 8-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள், பட்டதாரிகள், பட்டயப்படிப்பு, மருத்துவம், ஐடிஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டம் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வித் தகுதியுள்ளவா்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோா் https://www.tnprivatejobs.tn.gov.in/ இணையதளம் மூலம் தங்களது கல்வித் தகுதியை பதிவு செய்யலாம். மேலும், விவரம் தேவைப்படுவோா், திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தை தொடா்பு கொள்ளலாம்.

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு விருது

வாணியம்பாடி மருதா் கேசரி மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது. ஐசிடி அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட திறன் வளா் பயிற்சிக்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது. விழாவில் மருதா் ... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சிய... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்... மேலும் பார்க்க

மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல்... மேலும் பார்க்க

அரிய வகை ஆந்தை மீட்பு

திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெ... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதி உலா

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிரசு வீதி உலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்ப... மேலும் பார்க்க