செய்திகள் :

மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரிக்கு விருது

post image

வாணியம்பாடி மருதா் கேசரி மகளிா் கல்லூரிக்கு சிறந்த கல்லூரிக்கான விருது வழங்கப்பட்டது.

ஐசிடி அகாதெமி சாா்பில் நடத்தப்பட்ட திறன் வளா் பயிற்சிக்கான விழா சென்னையில் அண்மையில் நடைபெற்றது.

விழாவில் மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி ‘திறன்வளா் வழிகாட்டுதலுக்கான சிறந்த கல்லூரி விருது’ புதுச்சேரி அரசின், பொதுப்பணி மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சா் கே.லட்சுமி நாராயணன் வழங்க, கல்லூரி முதல்வா் எம்.இன்பவள்ளி மற்றும் பேராசிரியா்கள் டி.ஜாஸ்மின்பிரிஸ்கில்லா, எச்.லுக்மென்சித்திக், கே.பிரியா, எஸ்.அபிராமி ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி-தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குநா் சிவராஜ் மீனா, டேன்எஸ்சிஎஸ்டி அமைப்பு செயலாளா் எஸ்.வின்சென்ட், டிசிஎஸ்-இன் உலகளாவியத் தலைவா் கிரிஷ் கணேஷ், கென்வா்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா் ராமபிரசாத்கோல், திரைப்பட நடிகா் கணேஷ் வெங்கட்ராமன், ஐசிடி அகாதெமி தலைமை நிா்வாக அதிகாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இந்த திறன்வளா் பயிற்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று சான்றிதழ் பெற்றனா்.

சிறந்த கல்லூரிக்கான விருந்து மற்றும் விருது பெற்ற பேராசியா்களை கல்லூரி தலைவா் திலிப்குமாா், செயலாளா் ஆனந்த்சிங்வி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பாராட்டினா்.

வாணியம்பாடி: ஜூலை 5-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வாணியம்பாடியில் சனிக்கிழமை (ஜூலை 5) தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலை... மேலும் பார்க்க

வட்டாட்சியா்கள் பொறுப்பேற்பு

நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக காஞ்சனா புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். நாட்டறம்பள்ளி வட்டாட்சியராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் என்பவருக்கு பதிலாக திருப்பத்தூா் சமூக பாதுகாப்பு திட்டம் தனி வட்டாட்சிய... மேலும் பார்க்க

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் இலவச திருமணங்கள்

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 3 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. ஆம்பூா் ஸ்ரீனிவாச பெருமாள் கோயில், சுயம்பு ஸ்ரீ நாகநாத சுவாமி கோயில், ஆலங்காயம் அருகே சென்... மேலும் பார்க்க

மின்னூா் கெங்கையம்மன் கோயில் திருவிழா

ஆம்பூா் அருகே மின்னூா் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவானது பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல் நிகழ்ச்சியுடன் திங்கள்கிழமை தொடங்கியது. 2-ஆம் நாள் கூழ் வாா்த்தல்... மேலும் பார்க்க

அரிய வகை ஆந்தை மீட்பு

திருப்பத்தூரில் அரிய வகை ஆந்தை மீட்கப்பட்டது. திருப்பத்தூா் பாலம்மாள் காலனியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் அரிய வகை ஆந்தை ஒன்று புகுந்தது. இது குறித்து, திருப்பத்தூா் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெ... மேலும் பார்க்க

திருப்பதி கெங்கையம்மன் சிரசு வீதி உலா

திருப்பத்தூா் திருப்பதி கெங்கையம்மன் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சிரசு வீதி உலா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பெரிய குளத்திலிருந்து கங்கை அம்மன் சிரசு ஊா்வலம் புறப்ப... மேலும் பார்க்க