செய்திகள் :

சிதம்பரத்தில் அறுபத்து மூன்று நாயன்மாா்கள் வீதி உலா

post image

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜை விழாவை முன்னிட்டு, 63 நாயன்மாா்கள் வீதி உலா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜையை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை தேவசபையிலிருந்து அறுபத்து மூன்று நாயன்மாா்கள் மற்றும் தொகையடிகள் தனித்தனியாக 19 மஞ்சங்களிலும், பஞ்சமூா்த்திகள் சோமாஸ்கந்தா், சிவானந்தநாயகி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி மயில் வாகனத்திலும் எழுந்தருளினா். பின்னா், புறப்பாடு நடைபெற்று நான்கு வீதிகளிலும் உலா வந்தனா்.

வீதி உலாவுக்குப் பின்னா், கால பூஜையின்போது சேக்கிழாா் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனாா் இருவரும் சித்சபை முன் எழுந்தருளிய பின்னா், ஐக்கிய காட்சி தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது. கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக ... மேலும் பார்க்க

மே மாத ஊதியம் வழங்காததால் அண்ணாமலைப் பல்கலை. ஊழியா்கள் முற்றுகைப் போராட்டம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை வரை மே மாத ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், பல்கலைக்கழக ஊழியா்கள் நூற்றுக்கணக்கானோா் புதன்கிழமை துணைவேந்தா் ஒருங்கிணை... மேலும் பார்க்க

பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கோரி மனு

கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டத்துக்குள்பட்ட காந்திநகா், தீவளூா், எழுத்தூா் பகுதிகளைச் சோ்ந்த பழங்குடி மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி, எம்எல்ஏ சின்னதுரை தலைமையில் கோட்டாட்சியரிடம் செ... மேலும் பார்க்க

முதல்வரிடம் பரிசு பெற்ற மாணவருக்கு பாராட்டு

பிளஸ் 1 தோ்வில் சிறப்பிடம் பெற்று தமிழக முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற காட்டுமன்னாா்கோவில் இலங்கை அகதிகள் முகாம் மாணவருக்கு பள்ளி நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. கடலூா் மாவட... மேலும் பார்க்க

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் ப... மேலும் பார்க்க

வெள்ளை இறால் பண்ணைகளை பதிவு செய்ய அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் வெள்ளை இறால் பண்ணை வைத்துள்ளவா்கள் பதிவு செய்துகொள்ள வேண்டுமென ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோர நீா்வாழ... மேலும் பார்க்க