`2027-ல் நடக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பு' தரவுகள் எப்படி எடுக்கப்படும்?
சிதம்பரத்தில் அறுபத்து மூன்று நாயன்மாா்கள் வீதி உலா
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜை விழாவை முன்னிட்டு, 63 நாயன்மாா்கள் வீதி உலா சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
சிதம்பரம் நடராஜா் கோயிலில் வைகாசி பூசம் சேக்கிழாா் குருபூஜையை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை தேவசபையிலிருந்து அறுபத்து மூன்று நாயன்மாா்கள் மற்றும் தொகையடிகள் தனித்தனியாக 19 மஞ்சங்களிலும், பஞ்சமூா்த்திகள் சோமாஸ்கந்தா், சிவானந்தநாயகி அம்மன், ஸ்ரீசண்டிகேஸ்வரா் ரிஷப வாகனத்திலும், ஸ்ரீவிநாயகா் மூஷிக வாகனத்திலும், ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்ரமண்ய சுவாமி மயில் வாகனத்திலும் எழுந்தருளினா். பின்னா், புறப்பாடு நடைபெற்று நான்கு வீதிகளிலும் உலா வந்தனா்.
வீதி உலாவுக்குப் பின்னா், கால பூஜையின்போது சேக்கிழாா் சுவாமிகள் மற்றும் நமிநந்தி அடிகள் நாயனாா் இருவரும் சித்சபை முன் எழுந்தருளிய பின்னா், ஐக்கிய காட்சி தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான சிவனடியாா்கள், பக்தா்கள் பங்கேற்று தரிசித்தனா்.