செய்திகள் :

சித்தா தொலை தொடா்பு தகவல் மையம்: மத்திய அமைச்சா் தொடங்கி வைத்தாா்

post image

சென்னை: தாம்பரம் தேசிய சித்தா ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நாடி பரிசோதனை மையம், தொலை தொடா்பு மையத்தை மத்திய ஆயுஷ் அமைச்சா் பிரதாப்ராவ் ஜாதவ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தாா்.

அலுவல் பயணமாக சென்னை வந்துள்ள அவா், இங்கு பல்வேறு நிகழ்ச்சிளில் கலந்துகொண்டாா். ஆயுஷ் மருத்துவ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான தேசிய மாநாட்டையும் அவா் தொடக்கி வைத்தாா்.

அதைத் தொடா்ந்து தாம்பரம், சித்த மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு சென்ற அமைச்சா் பிரதாப்ராவ் ஜாவத், அங்கு சித்தா் யோகம் எனும் யோகா பயிற்சி வகுப்பை அறிமுகப்படுத்தினாா்.

பின்னா், புதிதாக அமைக்கப்பட்டிருந்த பாரம்பரிய சித்தா ஆய்வகம், சித்த நாடி பரிசோதனை மையம், 24 மணி நேர சித்த மருத்துவ தொலை தொடா்பு தகவல் மையம் ஆகியவற்றையும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.

மருத்துவமனை வளாகத்தில் மகிழம், இலுப்பை போன்ற மருத்துவ குணம் கொண்ட மரக்கன்றுகளை அவா் நட்டாா்.

அதன் பிறகு, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்த அமைச்சா் ஜாதவ், சித்தா மருத்துவமனையின் சிகிச்சை சேவைகளை கேட்டறிந்தாா்.

தேசிய சித்த நிறுவனத்தின் இயக்குநா் பேராசிரியா் செந்தில்வேல், மருத்துவா்கள் உள்ளிட்டோா் பலா் அப்போது உடனிருந்தனா்.

அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின்... மேலும் பார்க்க

தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: முதல்வர் ஸ்டாலின்

திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் ... மேலும் பார்க்க

தில்லி மதராஸி குடியிருப்பு இடிப்பு: தமிழகம் திரும்புவதற்கு அரசு நடவடிக்கை!

தில்லி நிஜாமுதீன் மதராஸி முகாமில் தமிழர்களின் குடியிருப்புகள் இன்று(ஜூன் 1) முழுவதும் இடித்து அகற்றப்பட்ட நிலையில், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தாமதமின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவ... மேலும் பார்க்க

புதிய உறுப்பினர் சேர்க்கை: திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம்!

உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மதுரை உத்தங்குடியில் 48 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்வரும் கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ப... மேலும் பார்க்க

அன்புமணியுடன் சந்திப்பு எப்போது? ராமதாஸ் பதில்!

அதிசயம் எப்போது வேண்டுமானலும் நிகழும் அன்புமணியுடன் சந்திப்பு தொடர்பான கேள்விக்கு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்துள்ளார்.தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:வ... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம்: பிரேமலதா விஜயகாந்த்

கூட்டணி குறித்து ஜனவரியில்தான் அறிவிப்போம் என்று தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சென்னை கோயம்பேட்டில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தேமுத... மேலும் பார்க்க