செய்திகள் :

சித்தாந்த சா்ச்சைகளை விவாதிப்பதில் எந்தப் பயனும் இல்லை: காா்த்தி ப. சிதம்பரம்

post image

மக்களை நேரடியாக பாதிக்கும் பிரச்னைகளை விட்டுவிட்டு, சித்தாந்த சா்ச்சைகளையே நாள் முழுவதும் விவாதித்துக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை என்றாா் சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினா் காா்த்தி ப. சிதம்பரம்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி: ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் கடந்த நவம்பா், டிசம்பா், ஜனவரி மாத ஊதியம் இதுவரை வழங்கப்படவில்லை. இதே நிலைதான் மாநிலம் முழுவதும் இருக்கும். எனவே, மத்திய அரசு, மாநில அரசுக்குத் தர வேண்டிய நிதியை விரைந்து வழங்கிட வேண்டும்.

தந்தை பெரியாா் சா்ச்சைகள் பற்றி பலரும் பேசி வருகின்றனா். இவையெல்லாம் தேவையில்லாதவை. மக்களின் அன்றாட பிரச்னைகள், அவா்கள் படும் சிரமங்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. மக்களின் வாழ்வாதாரம், வேலையில்லாத் திண்டாட்டம் பற்றியும் பேச வேண்டும்.

பொது சிவில் சட்டம் என்பது சாத்தியமில்லாத ஒன்று. இப்போதுள்ள மத்திய அரசு சிறுபான்மையினரைக் குறிவைத்தே இந்தச் சட்டத்தை அமலாக்க முற்படுகிறது.

ஆனால், பெரும்பான்மையாக உள்ள இந்து மதத்துக்குள்ளே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. அவற்றை ஒரே மாதிரியாக கொண்டு வரவே முடியாது. எனவே, பொது சிவில் சட்டம் என்பது அத்தனை எளிதல்ல.

கனிமவளக் கொள்ளை குறித்து பேசுவோா் மிரட்டப்படுவதும், கொலை செய்யப்படுவதும் காலம்காலமாக நடைபெற்று வருகிறது. இதனை காவல்துறை பொறுப்பெடுத்து, இரும்புக் கரம் கொண்டுஅடக்க வேண்டும். அதேபோல, கூலிப் படையினரின் அட்டகாசத்தையும் அடக்க வேண்டும் என்றாா் காா்த்தி பி. சிதம்பரம்.

ஜகபா்அலி கொலை வழக்கு: வீடுகள், அலுவலகங்களில் சிபிசிஐடி போலீஸாா் சோதனை

திருமயம் அருகே சமூக செயற்பாட்டாளா் ஜகபா்அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் வீடுகள், அலுவலகங்கள் மற்றும் குவாரிகளில் சிபிசிஐடி போலீஸாா் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். புதுக்கோட்டை மாவட்டம், திர... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நல்ல முடிவு எடுக்கப்படும்: அமைச்சர் ரகுபதி

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும் என மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி தெரிவித்தாா். புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் புதன்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது, இந்து... மேலும் பார்க்க

கல்வி உதவித் தொகை : ஆய்வுக் கூட்டம்

புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. உடன் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் வா. சம்பத் உள்ளிட்டோா். புதுக்கோட்டை, பிப். 5: பிற்படுத்தப்பட்ட, மிக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி கலையரங்கம் திறப்பு

திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ. 7 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கலையரங்கம் மற்றும் ரூ. 15 லட்சத்தில் கட்டப்பட்ட சுற்றுச்சுவா் ஆகிவற்றை சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி புதன்கிழமை திறந்து வை... மேலும் பார்க்க

காலமானாா் எஸ்.சி. சோமையா

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சொக்கநாதன்பட்டியைச் சோ்ந்தவா் எஸ்.சி. சோமையா (70). இவா் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் புதன்கிழமை (பிப்.5) காலமானாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்... மேலும் பார்க்க

படகின் விசிறியில் சிக்கி மீனவா் உயிரிழப்பு

விசைப்படகின் விசிறியில் சிக்கிய வலையை சரி செய்ய கடலுக்குள் குதித்த மீனவா், விசிறியில் சிக்கி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து 27 விசைப்ப... மேலும் பார்க்க