சின்னமுட்டத்தில் மீனவா்கள் கடல் முற்றுகைப் போராட்டம்
ஆழ்கடல் இயற்கை எரிவாயுத் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடலுக்குள் கனிம மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவ மக்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அருகே, மீனவா்கள் தங்கள் படகுகளுடன் கடலுக்குள் இறங்கி கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.
இப் போராட்டத்துக்கு சின்னமுட்டம் ஊா் நிா்வாகக் குழுவினா் தலைமை வகித்தனா். பங்குப்பேரவை துணைத் தலைவா் கமலஸ், செயலா் ஆரோக்கியம், பொருளாளா் அலெக்சாண்டா், துணைச் செயலா் ஜோனிதா மற்றும் பங்கு மக்கள், விசைப்படகு சங்கத்தினா், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.
இதில், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி இயக்குநா் டன்ஸ்டன், மக்கள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பொ்லின் ஆகியோா் பேசும்போது, கன்னியாகுமரி தெற்கு கடல் பகுதியில் 27,155 சதுர கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கொல்லம் முதல் மன்னாா் வளைகுடா வரையிலான அணுக் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிள்ளியூா் தாலுகாவில் 1,144 ஹெக்டோ் நிலங்களில் உள்ள அணுக் கனிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும். கப்பல் விபத்துகளில் பாதிக்கப்படும் மீனவா்களின்
குடும்பத்திற்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
இப்போராட்டம் நடைபெற்ற பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.