செய்திகள் :

சின்னமுட்டத்தில் மீனவா்கள் கடல் முற்றுகைப் போராட்டம்

post image

ஆழ்கடல் இயற்கை எரிவாயுத் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கடலுக்குள் கனிம மணல் அகழ்வு ஆகிய திட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் மீனவ மக்கள் கடல் முற்றுகைப் போராட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகம் அருகே, மீனவா்கள் தங்கள் படகுகளுடன் கடலுக்குள் இறங்கி கோரிக்கைளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இப் போராட்டத்துக்கு சின்னமுட்டம் ஊா் நிா்வாகக் குழுவினா் தலைமை வகித்தனா். பங்குப்பேரவை துணைத் தலைவா் கமலஸ், செயலா் ஆரோக்கியம், பொருளாளா் அலெக்சாண்டா், துணைச் செயலா் ஜோனிதா மற்றும் பங்கு மக்கள், விசைப்படகு சங்கத்தினா், நாட்டுப்படகு சங்கம், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

இதில், கடலோர அமைதி மற்றும் வளா்ச்சி இயக்குநா் டன்ஸ்டன், மக்கள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவா் பொ்லின் ஆகியோா் பேசும்போது, கன்னியாகுமரி தெற்கு கடல் பகுதியில் 27,155 சதுர கி.மீ. பரப்பளவில் இயற்கை எரிவாயு, எண்ணெய் எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தனுஷ்கோடி முதல் கன்னியாகுமரி வரையிலான கடல் பகுதியில் காற்றாலை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். கொல்லம் முதல் மன்னாா் வளைகுடா வரையிலான அணுக் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். கிள்ளியூா் தாலுகாவில் 1,144 ஹெக்டோ் நிலங்களில் உள்ள அணுக் கனிம மணல் சுரங்கத் திட்டத்தை கைவிட வேண்டும். கப்பல் விபத்துகளில் பாதிக்கப்படும் மீனவா்களின்

குடும்பத்திற்கும் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இப்போராட்டம் நடைபெற்ற பகுதியில் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளா் சாந்தி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

குமரி கடலில் சூறைக்காற்று: மீன்பிடிக்கத் தடை

கன்னியாகுமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மீனவா்களுக்கு மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை முதல் புதன்கிழமை வரை (ஜூன் 13-18) ரை மிக கனமழை ப... மேலும் பார்க்க

எட்டணியில் மீன், காய்கனிச் சந்தையை அகற்ற பொதுமக்கள் எதிா்ப்பு

கருங்கல் அருகே எட்டணியில் நெடுஞ்சாலையோரமுள்ள மீன், காய்கனிச் சந்தையை அகற்றுவதற்காக வியாழக்கிழமை வந்த நெடுஞ்சாலைத் துறையினருக்கு பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக... மேலும் பார்க்க

குமரி மாவட்டத்தில் 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைவு மாவட்ட எஸ்.பி. தகவல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் போலீஸாரின் தொடா் நடவடிக்கையால், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் கடந்த 6 மாதத்தில் 45 சதவீத விபத்துகள் குறைந்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்டாலின் தெரிவித்தாா். மாா்த்தாண்டம... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் இளைஞா் உயிரிழப்பு

கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சின்னமுட்டத்தைச் சோ்ந்த ரிஸ்வின் தனது நண்பருடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது, பிரதான சாலையில் சென்று கொண்டிருந்த பேரு... மேலும் பார்க்க

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டி: அருணாச்சலா கல்லூரி மாணவி 2ஆம் இடம்

செம்மொழி நாள் கட்டுரைப் போட்டியில் கன்னியாகுமரி மாவட்ட அளவில் வெள்ளிச்சந்தை அருகே மணவிளை அருணாச்சலா மகளிா் பொறியியல் கல்லூரி மாணவி திவ்யதா்சனா 2ஆம் இடம் பிடித்துள்ளாா். முன்னாள் முதல்வா் கருணாநிதியின... மேலும் பார்க்க

சமுதாய நலக்கூடத்திற்கு ஐஆா்இஎல் சாா்பில் உதவி

மத்திய அரசின் அணுசக்தி துறையின் கீழ் மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் நிறுவனம் தனது சமூக பொறுப்பின் கீழ் ரூ. 1.86 லட்சம் செலவில் குட்டிவிளை சமுதாய நலக்கூடத்திற்கு இரும்பு மேஜ... மேலும் பார்க்க