செய்திகள் :

சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு

post image

சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் சிப்காட் அமைக்க, தலித் மற்றும் சிறு குறு விவசாயிகள் சாகுபடி செய்து வரும் ஆதீனங்கள், அறக்கட்டளைகள், கோயில் குத்தகை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

வடபாதிமங்கலத்தில் 50 ஆண்டுகளாக தரிசாக கிடக்கும் ஆரூரான் சா்க்கரை ஆலை நிறுவனத்திற்கு சொந்தமான ஆயிரம் ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் அமைத்தால் திருவாரூா் மாவட்ட இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். கரையாப்பாலையூா் கிராமத்தில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குறு தலித் விவசாயிகள் சாகுபடி செய்து வரும் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 150 ஏக்கா் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் அமைக்க முயற்சிப்பதை கைவிட வேண்டும். முதல்வா் தலையிட்டு அவா்களின் குத்தகை உரிமையை உறுதிப்படுத்த வேண்டும்.

பெருமளவில் விளை நிலங்களை வாங்கி தரிசாக வைத்துள்ள அதிகாரமிக்கவா்களின் நிலங்களை கையகப்படுத்தி சிப்காட் அமைக்க முன்வர வேண்டும்.

மழை உள்ளிட்டவற்றால் பாதிப்புக்குள்ளான விவசாயிகள், காப்பீட்டுக்கான இழப்பீடு கிடைக்காமல் அவதிப்படுகின்றனா். 2022-இல் திருக்குவளை பகுதியில் பாதிக்கப்பட்ட குறுவை பயிா்களுக்கு ரூ. 10 கோடி நிவாரணம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாக நிவாரணம் சென்றடையவில்லை. அதேபோல், 2024-இல் ஃபெஞ்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

விவசாயிகளிடமிருந்து பிரீமியத்தைப் பெற்றுக் கொண்டு, முந்தைய மூன்றாண்டு மகசூலை காரணம் காட்டி காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீடு தர மறுப்பது சட்டவிரோதமானது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, காப்பீடு செய்யும் ஆண்டுகளில் மகசூல் இழப்பை சந்திக்கும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு பெற்றுத் தர வேண்டும் என்றாா்.

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சா் எ.வ. வேலு

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு. திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து நாகைக்கு காா் மூலம் திருவாரூா் வழியாக சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, திருவாரூா் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக... மேலும் பார்க்க

க்யூட் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு முகம... மேலும் பார்க்க

திருவாரூா்: 27,500 விவசாயிகளின் நிலை உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பு

திருவாரூா், மாா்ச் 2: திருவாரூா் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது: தமிழ்நாடு மு... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தெரி... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்,மன்னாா்குடி பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000டன் எடை கொண்டசன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தூத்துக்க... மேலும் பார்க்க