செய்திகள் :

திருவாரூா்: 27,500 விவசாயிகளின் நிலை உடைமைப் பதிவுகள் சரிபாா்ப்பு

post image

திருவாரூா், மாா்ச் 2: திருவாரூா் மாவட்டத்தில் 27,500 விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்க்கும் முகாம், பிப்.13 ஆம் தேதி முதல் வேளாண்துறை அலுவலா்கள், சமூக வளா்ச்சிப் பணியாளா்கள் மூலமாக அனைத்து கிராம பஞ்சாயத்து அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

திருவாரூா் மாவட்டத்தில் இதுவரை 27,500 விவசாயிகள், தங்களின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்த்து பயனடைந்துள்ளனா். மீதமுள்ள விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் இந்த மாத இறுதிக்குள் தங்களின் நில உடைமை விவரங்களை சரிபாா்த்துக் கொள்ள வேண்டும்.

இதனிடையே, நில உடைமைப் பதிவுகள் சரிபாா்க்கும் பணியை விரைவுபடுத்தும் நோக்கில், அனைத்து பொதுச் சேவை மையங்கள் மூலமாகவும் பிப்.28-ஆம் தேதி முதல் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்களுடைய ஆதாா் அட்டை, நிலப்பட்டா, ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி ஆகியவற்றுடன் பொது சேவை மையங்கள், கிராம பஞ்சாயத்து அலுவலகங்களை தொடா்பு கொண்டு பதிவுகளை சரிபாா்த்து பயன்பெறலாம் என்றாா்.

காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: அமைச்சா் எ.வ. வேலு

தமிழகத்தில் காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றாா் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ. வேலு. திருவாரூா் அருகேயுள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம... மேலும் பார்க்க

முதல்வருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து நாகைக்கு காா் மூலம் திருவாரூா் வழியாக சென்ற முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, திருவாரூா் மாவட்ட எல்லையான நீடாமங்கலம் அருகேயுள்ள கோவில்வெண்ணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக... மேலும் பார்க்க

க்யூட் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம்

க்யூட் நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 22 வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இப்பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய தோ்வு முகம... மேலும் பார்க்க

சிப்காட் அமைக்க விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதற்கு எதிா்ப்பு

சிப்காட் அமைக்க சிறு, குறு விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தியுள்ளாா். இதுகுற... மேலும் பார்க்க

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு பற்றாக்குறையை போக்க வலியுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில் நெல் கொள்முதல் பணிகள் சீராக நடைபெற சாக்கு தட்டுப்பாட்டை போக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவா் மாஸ் அப்துல் அஜீஸ் தெரி... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு 2 ஆயிரம் டன் நெல் அனுப்பிவைப்பு

நீடாமங்கலம்,மன்னாா்குடி பகுதிகளில் இயங்கிவரும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட 2,000டன் எடை கொண்டசன்ன ரக நெல் நீடாமங்கலத்திலிருந்து சரக்கு ரயில் மூலம் அரவைக்காக தூத்துக்க... மேலும் பார்க்க