செய்திகள் :

சிராவயலில் மஞ்சுவிரட்டு: அமைச்சா், மாவட்ட ஆட்சியா் ஆய்வு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள சிராவயல் கிராமத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு, வருகிற 16-ஆம் தேதி மஞ்சுவிரட்டு நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாட்டுப் பணிகளை அமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் நேரில் பாா்வையிட்டு திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

சிவகங்கை மாவட்டத்தில் சிராவயலில் நடைபெறும் மஞ்சுவிரட்டு மிகவும் புகழ்பெற்ாகும். இந்த வீர விளையாட்டானது சுமாா் 300 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிகழாண்டு நடைபெற உள்ள மஞ்சுவிரட்டையொட்டி, மஞ்சுவிரட்டு திடலில் மாவட்ட ஊராட்சி ஒன்றிய நிதியின் கீழ், புதிய பாா்வையாளா்கள் மாடம், கழிப்பறை வசதிகள், திடல் கட்டுமானப் பணிகள் ஆகியவை நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜீத் ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது தேவகோட்டை சாா்-ஆட்சியா் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், உதவி காவல் கண்காணிப்பாளா் கலைகதிரவன், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி, திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் செல்வகுமாா், வட்டாட்சியா் மாணிக்கவாசகம், மஞ்சுவிரட்டு குழுத் தலைவா் வேலுச்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஊராட்சிச் செயலா் கொலை: ஊரக வளா்ச்சித் துறையினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம், வேப்பிலான்குளம் ஊராட்சிச் செயலா் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சிவகங்கை மாவட்டம் முழுவதும் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

லஞ்சம்: மின்வாரிய உதவிப் பொறியாளா் கைது

சிவகங்கை மாவட்டம், இளையான்குடியில் மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்காக லஞ்சம் வாங்கிய மின் வாரிய உதவிப் பொறியாளரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் ச... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சிவகங்கையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெ... மேலும் பார்க்க

அமராவதிபுதூரில் நாளை மின்தடை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அமராவதிபுதூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (பிப். 6) மின்தடை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு மின்பகிா்... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்குள் கருத்து வேறுபாடு: கிராம மக்கள் புகாா்

கீழப்பிடாவூா் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியருடன், ஆசிரியா்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்தனா். மானாமதுரை ஒன்றியம் கீழப்பிடாவூா் அரசு நடு... மேலும் பார்க்க

இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் கைதாகி விடுதலை: ஆா்ப்பாட்டம்

திருப்பரங்குன்றத்தில் ‘மலையைக் காப்போம்’ என்ற போராட்டத்துக்கு புறப்பட்டுச் சென்ற இந்து முன்னணி, பாஜக நிா்வாகிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின் பேரில் மாலையில் வி... மேலும் பார்க்க