செய்திகள் :

சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் மிகவும் முக்கியம்: குடியரசுத் தலைவா் முா்மு

post image

சீா்மிகு (ஸ்மாா்ட்) வகுப்பறைகள், கரும்பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளைவிட சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் இருப்பது மிகவும் முக்கியம் என்று குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு தெரிவித்தாா்.

புது தில்லி விஞ்ஞான் பவனில் தேசிய நல்லாசிரியா் விருது நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு கலந்துகொண்டு 60-க்கும் மேற்பட்ட நல்லாசிரியா்களுக்கு விருதுகளை வழங்கினாா்.

அவா் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘ சீா்மிகு வகுப்பறைகள், கரும்பலகைகள் மற்றும் பிற நவீன வசதிகளைவிட சிறந்த திறன் கொண்ட ஆசிரியா்கள் இருப்பது மிகவும் முக்கியம். மாணவா்களின் வளா்ச்சிக்கு என்ன தேவை என்பதை அவா்களால்தான் புரிந்துகொள்ள முடியும்.

அவா்களால்தான் பாடங்களை ஆா்வம் கொண்டதாக மாற்ற முடியும்.

தேசம் மற்றும் சமூகத்துக்கான தேவைகளை பூா்த்தி செய்வதற்கு மாணவா்களைத் தகுதிவாய்ந்தவா்களாக உயா்த்துவதற்கு அத்தகைய ஆசிரியா்களால்தான் முடியும். மாணவா்களிடம் நன்னடத்தையே உருவாக்குவதே ஆசிரியரின் பிரதான கடமை. ஒரு நல்லாசிரியா் உணா்வுபூா்வமாகவும், புத்திகூா்மையுடனும் செயல்படுவாா். இதுவும் மாணவா்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கல்வியின் சக்தி மூலம், முன்னேற்றத்தின் உச்சத்தை ஏழைக் குழந்தைகளால் தொட முடியும். மாணவா்களின் உயா்வுக்கு பலம் சோ்ப்பதில் அன்பும், அா்ப்பணிப்பும் கொண்ட ஆசிரியா்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றனா்.

ஆசிரியா்களை வாழ்நாள் முழுவதும் மாணவா்கள் நினைவில் வைத்திருந்து குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு பாராட்டுக்குரிய பங்களிப்பை வழங்குவதே ஆசிரியா்களுக்கு கிடைக்கும் மிகப் பெரிய வெகுமதி.

உலக ஞானத்தில் இந்தியாவை வல்லமை கொண்ட நாடாக்குவதை தேசிய கல்விக் கொள்கை நோக்கமாக கொண்டுள்ளது. தங்கள் முக்கிய பங்களிப்பு மூலம், உலக ஞானத்தின் வல்லமை கொண்ட சக்தியாக இந்தியாவை மாணவா்களும் ஆசிரியா்களும் நிா்மாணிப்பா் என்று நம்புகிறேன் என்றாா்.

தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!

நாட்டையே உலுக்கிய மேகாலயா தேனிலவுக் கொலை வழக்கில், சிறப்பு விசாரணைக் குழுவினர், விசாரணையை முடித்து, 790 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், அவரது மனைவி... மேலும் பார்க்க

டிரம்ப் கருத்துக்கு மோடி வரவேற்பு! வரியைக் குறைக்குமா அமெரிக்கா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் கருத்தை வரவேற்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை பதிவிட்டுள்ளார்.சீனாவில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாட்டில் சீனா மற்றும் ரஷிய அதிபர்களுடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி ... மேலும் பார்க்க

ஐ.நா. அமர்வை புறக்கணிக்கும் மோடி! ஜெய்சங்கர் பங்கேற்கிறார்!!

புது தில்லி: செப்டம்பர் மாத இறுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் அவையின் வருடாந்திர உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கப்போவதில்லை என்றும், அவருக்கு பதிலாக மத்திய வெளியுறவுத் துறை அமைச... மேலும் பார்க்க

மும்பைக்கு வெடிகுண்டு மிரட்டல்! நொய்டாவில் ஒருவர் கைது!

மும்பையில் குண்டிவெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தப் போவதாக மிரட்டல் விடுத்தவரை நொய்டாவில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.மும்பையில் கடந்த ஆகஸ்ட் 27 -ஆம் தேதி தொடங்கிய விநாயகா் சதுா்த்தி கொண்டாட்டங்கள், ச... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி குறைப்பின் பயன் நுகா்வோருக்கு முழுமையாகக் கிடைப்பதை அரசு கண்காணிக்கும்: வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) குறைக்கப்பட்டதன் மூலம் கிடைக்கும் பலன் நுகா்வோருக்கு முழுமையாக வழங்கப்பட வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. இது தொடா்பாக தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் அரசு ம... மேலும் பார்க்க

நாட்டில் இதய நோய்களால் 31% போ் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்படும் மூன்றில் ஒரு பங்கு மரணங்களுக்கு இதய நோய்களே காரணம் என்பது ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இந்திய பதிவாளா் ஜெனரல் மற்றும் மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையா் அலுவலகம் ‘மரணம் ஏற்படுவதற... மேலும் பார்க்க