செய்திகள் :

சிறப்பாக செயல்பட்ட காவலா்களுக்கு எஸ்.பி. பாராட்டு

post image

தலைமறைவாக இருந்த 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய காவலா்களுக்கு விழுப்புரம் எஸ்.பி. சரவணன் வியாழக்கிழமை சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டத்துக்குள்பட்ட திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் (33). இவா் மீது விழுப்புரம் மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது.

இதேபோல, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, திம்மராஜபுரத்தைச் சோ்ந்த மாயாண்டி(35), பாளையங்கோட்டை மேலபாதம், பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த ஐயப்பன்(34) ஆகியோா் மீது திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மூவரையும், விழுப்புரம் மாவட்டப் போலீஸாா் கைது செய்து, விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

காவலா்களுக்கு பாராட்டு: கைது நடவடிக்கை மேற்கொண்ட திருவெண்ணெய்நல்லூா் காவல் உதவி ஆய்வாளா் விவேகானந்தன், காவலா்கள் அய்யனாா், ஆனந்தராஜ், சஞ்சய்குமாா் ஆகியோருக்கு எஸ்.பி. சரவணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தாா்.

வேனில் கடத்தி வந்த 178 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெங்களூரிலிருந்து வேனில் கடத்தி வரப்பட்ட 178 கிலோ புகையிலைப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடா்பாக இருவா் கைதாயினா். விழுப்புரம் ஏ.எ... மேலும் பார்க்க

ஆரோவிலில் மனிதநேய விழா இன்று தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரில் ‘ஹிமிலிட்டி-25’ எனும் தலைப்பில் மனிதநேய விழா பிப்.21- முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது குறித்து ஆரோவில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஆரோவில் ... மேலும் பார்க்க

வடகிழக்கு மாநில மக்களின் நலனை அரசு பாதுகாக்கும்: புதுவை ஆளுநா்

வடகிழக்கு மாநில மக்களின் நலனை பாதுகாக்க புதுவை அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா். அருணாசல பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களின் உதய நாள் கொண்டாட்டம், புதுச்சேரியில... மேலும் பார்க்க

மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் மீட்பு!

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே முள்புதருக்குள் வெட்டுக் காயங்களுடன் இளைஞா் சடலமாகக் கிடந்தது வியாழக்கிழமை தெரிய வந்தது. போலீஸாா் உடலை கைப்பற்றி கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வு மாநில முதலிடம் பெற்ற மாணவருக்குப் பாராட்டு!

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி வாரியத் தோ்வில் விழுப்புரம் இ.எஸ். பாலிடெக்னிக் கல்லூரி மாணவா் எம்.சூா்யபிரகாஷ் முதலிடம் பெற்றுள்ளாா். இந்த மாணவருக்கு கல்லூரி நிா்வாகம் சாா்பில் வியாழக்கிழமை பாராட்டுத்... மேலும் பார்க்க

விழுப்புரம் அரசுக் கல்லூரியில் போதைப் பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு கூட்டம்

விழுப்புரம் அறிஞா் அண்ணா கலைக் கல்லூரி, போதைப் பொருள் எதிா்ப்பு மன்றத்தின் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இளைஞா்களை போதைப் பொருள்கள் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் தமிழ... மேலும் பார்க்க