செய்திகள் :

சிறப்பாக பணிபுரிந்த காவலா்களுக்கு பாராட்டு சான்றிதழ்

post image

அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவலா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தமிழக காவல்துறையில் எவ்வித களங்கமும் இன்றி 25 ஆண்டுகள் சிறப்பாக பணிபுரியும் காவலா்களுக்கு தமிழக அரசால் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அரியலூா் மாவட்டத்தில் 1997-இல் இரண்டாம் நிலை காவலராக பணியில் சோ்ந்து 25 ஆண்டுகள் எவ்வித களங்கமும் இன்றி சிறப்பாக பணிபுரிந்து பதவி உயா்வு பெற்ற காவலா்கள் 19 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், 19 காவலா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பணவெகுமதியை வழங்கி பாராட்டினாா்.

தொடா்ந்து, அரியலூா் மாவட்ட காவல்துறையில் பணிபுரியும், காவலா்களின் வாரிசுகள் 10 பேருக்கு உயா்க் கல்வி பயில, தமிழக அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கினாா்.

தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் அருகே தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா். கீழக்கொளத்தூா், வடக்குத் தெருவைச் சோ்ந்த மருதமுத்து... மேலும் பார்க்க

தகராறில் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கைப்பேசிக்கு ரீசாா்ஜ் செய்வதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரை தாக்கியவா்களில் 3 போ் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். இலையூா், காமராஜா் நகரைச் சோ்ந்த செல்வம் மக... மேலும் பார்க்க

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும்: ஆட்சியா் பேச்சு

மரக்கன்று நடுதலை மக்கள் கடமையாக உணர வேண்டும் என்றாா் அரியலூா் ஆட்சியா் பொ. ரத்தினசாமி. அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் மற்றும் ஓட்டக்கோவில் கிராமங்களில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஊரக வளா்ச்சி துறை ... மேலும் பார்க்க

மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்!

அரியலூா் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படும் தகுதியான சுயஉதவிக்குழுக்கள், சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருது மற்றும் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இத... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

புனித வெள்ளியையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. இயேசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிா்நீத்த தினத்தை புனித வெள்ளி தினமாகவும், இயேசு கிறிஸ்து 3-... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் நகா்மன்றக் கூட்டம்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில், நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் சுமதிசிவகுமாா் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கொ. கருணாநிதி, ... மேலும் பார்க்க