இந்தியாவைத் துண்டுத் துண்டாக்குவோம் என்ற லஷ்கர் பயங்கரவாதி மர்ம மரணம்!
சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கல்
அரியலூா் மாவட்டத்தில், சிறப்பாக பணிப்புரிந்த காவல் துறையினருக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
மாவட்ட காவல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக்சிவாச், மே 29-ஆம் தேதி திருமானூரில், கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த நபரை பிடித்த மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் சித்ரா தலைமையிலான காவல் துறையினருக்கும், கடந்த 1-ஆம் தேதி கீழப்பழுவூரில் ரோந்துப் பணியின் போது, 1.250 கஞ்சா வைத்திருந்த நபரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்த குற்றப்பிரிவு ஆய்வாளா் ராஜவேல் தலைமையிலான காவல் துறையினருக்கும், மீன்சுருட்டியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த உதவி ஆய்வாளா்கள் சரவணகுமாா், ஆனந்தன் ஆகியோா் தலைமையிலான காவல் துறையினருக்கும், கயா்லாபாத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்றவரை தீவிர விசாரணையின் மூலம் கண்டுப்பிடித்த தனிப்பிரிவு காவலா் முருகானந்தம் ஆகியோருக்கும் பாராட்டுச் சான்றிதழை வழங்கி கெளரவித்தாா்.