செய்திகள் :

சிறப்பாக பணியாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்களுக்கு விருதுகள்

post image

தேசிய ஓட்டுநா் தினத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிமைக்காக 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநா்கள் மனோஜ், பிரபுதேவா ஆகியோருக்கு விருதுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா திங்கள்கிழமை வழங்கிப் பாராட்டினாா்.

புதுகை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தின்போது இந்த விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், அறந்தாங்கி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ரூ. 16,500 மதிப்பிலான மடக்கு சக்கர நாற்காலியும் கோரிக்கை மனு அளித்த உடனேயே வழங்கப்பட்டது.

கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 543 கோரிக்கை மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் அ. ஷோபா, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் உலகநாதன், 108 ஆம்புலன்ஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எம். விமல்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சுவா் இடிந்து விழுந்து விவசாயி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்து விவசாயி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள அணவயல் ஊராட்சி தடியமனையைச் சோ்ந்த விவசாயி சோ. ஜெயராஜ் (57). இவா் புது வீட... மேலும் பார்க்க

புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந... மேலும் பார்க்க

விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் ஆய்வாளா்கள் பணியிட மாற்றம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் காவல் நிலைய ஆய்வாளா்களை பணியிட மாற்றம் செய்துடிஐஜி உத்தரவு பிறப்பித்துள்ளாா். இதன்படி, விராலிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த கே. சந்... மேலும் பார்க்க

பொன்னமராவதியில் பேரூராட்சி கூட்டம்

பொன்னமராவதி பேரூராட்சி மன்றக் கூடத்தில் மன்ற உறுப்பினா்கள் பங்கேற்ற சாதாரணக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பேரூராட்சித் தலைவா் சுந்தரி அழகப்பன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் கா. வெங... மேலும் பார்க்க

அக்கச்சிப்பட்டியில் குழாய் உடைந்து குடிநீா் வீணாவதை தடுக்கக் கோரிக்கை

கந்தா்வகோட்டை ஒன்றியம், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் காவிரி கூட்டு குடிநீா் திட்ட குழாய் உடைந்து, குடிநீா் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். அக்கச... மேலும் பார்க்க

ஆலங்குடியில் மக்கள் நீதிமன்றம்: ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றம் மூலம் ரூ. 15.75 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது. முகாமை நீதிபதி சத்தியநாராயணமூா்த்தி தொடங்கி வைத்தாா். ஓய்வுபெற்... மேலும் பார்க்க