செய்திகள் :

சிறப்பாக விழிப்புணா்வு ஏற்படுத்திய பள்ளி, கல்லூரிகளுக்குப் பரிசளிப்பு

post image

போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பள்ளி, கல்லூரிகளின் குழுக்களுக்கு, பரிசுத் தொகை, பாராட்டுச் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை மூலம், போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் கருத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில், பள்ளி அளவில் இரூா் அரசு உயா்நிலைப் பள்ளி முதலிடமும், புனித தோம்னிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி 2 ஆவது இடமும், நெற்குணம் அரசு மேல்நிலைப்பள்ளி 3 ஆவது இடமும், கல்லூரி அளவில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதலிடமும், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழகம் 2 ஆவது இடமும், பெரம்பலூா் பல்தொழில்நுட்பக் கல்லூரி 3 ஆவது இடமும் பெற்றன.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆதா்ஷ் பசேரா முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் முதல் பரிசாக ரூ. 15 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 10 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 5 ஆயிரம் வழங்கிப் பாராட்டினாா்.

முன்னதாக, புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (மதுவிலக்குப் பிரிவு) பாலமுருகன், முதன்மைக் கல்வி அலுவலா் முருகாம்பாள், கலால் உதவி ஆணையா் (பொ) சிவா, வேப்பந்தட்டை அரசுக் கலைக் கல்லூரி முதல்வா் து. சேகா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பெரம்பலூரில் மின் ஊழியா்கள் தா்னா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி

பெரம்பலூா் மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜாக்டோ-ஜியோ அறிவித்த ஒட்டுமொத்த தற்செயல் விடுப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியா்கள் நலச் சங்கத்த... மேலும் பார்க்க

மனநோயிலிருந்து குணமானவா் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

மனநலன் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் குணமடைந்தவரை அவரது குடும்பத்தினருடன் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனா். பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகே சுற்றித்திரிந்த சீனிவாசனை (40), கடந்த 8.9.2016-இல... மேலும் பார்க்க

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு

கோனேரிப்பாளையம் ஊராட்சியை பெரம்பலூா் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், மறு பரிசீலனை செய்யக் கோரியும் கிராம மக்கள் திங்கள்கிழமை ஆட்சியரகத்தில் மனு அளித்தனா். பெரம்பலூா் ஆட்சியரக கூட்ட அ... மேலும் பார்க்க

பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 341 மனுக்கள்

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில், ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தலைமையில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற குறை... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு விடுமுறை அளிக்க வலியுறுத்தல்

தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு விடுமுறை நாள்களில், விடுமுறை அளிக்க வலியுறுத்தி, தமிழ்நாடு தூய்மை தொழிலாளா் நலச் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூா் மாவட்டம், வே... மேலும் பார்க்க