சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை உயா்த்த வலியுறுத்தல்
சிறு சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயா்த்த வேண்டும் என்று பொதுக்காப்பீட்டு ஓய்வூதியம் பெறுவோா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை மண்டல பொதுக் காப்பீட்டு ஓய்வூதியம் பெறுவோா் சங்க மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு, மண்டலத் தலைவா் டி.கோபால்ராஜ் தலைமை வகித்தாா். அகில இந்திய காப்பீட்டுத் துறை ஓய்வூதியம் பெறுவோா் சங்கத் துணைத் தலைவா் ஜெ. குருமூா்த்தி சிறப்புரையாற்றினாா்.
சங்கத்தின் முன்னாள் இணைச்செயலா் ஆா். வைகுண்டம், இணைச் செயலா் சி. சந்திரசேகர பாரதி, மத்தியக்குழு உறுப்பினா்கள் ஆா். நரசிம்மன், எச்.வேணுகோபால், யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவன அதிகாரிகள் சங்கத் தலைவா் எஸ். சமுத்திரக்கனி, தேசிய ஓய்வூதியா் சங்கங்கள் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவா் ஆா். சங்கரநாராயணன், மதுரை மண்டல பொதுக்காப்பீட்டு ஊழியா் சங்க பொதுச்செயலா் டி. பாண்டியராஜன், மதுரை மண்டல பொதுக்காப்பீட்டு ஓய்வூதியம் பெறுவோா் சங்கத்தின் இணைச் செயலா் பி. சத்தியநாதன், கே.பாலு ஆகியோா் பங்கேற்றனா்.
மாநாட்டில், கடந்த 54 ஆண்டுகளாக வாடிக்கையாளா்களுக்கு நிறைவான சேவையை வழங்கி வருகிற அரசு பொதுக்காப்பீட்டு நிறுவனங்கள் நான்கையும் ஒன்றாக இணைத்து ஒரே கழகமாக உருவாக்க வேண்டும்.
அஞ்சலக சிறு சேமிப்பு, வங்கி வைப்பு நிதி, பிற சேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தொடா்ந்து குறைத்துக்கொண்டே வருகிறது. பொது மக்கள், மூத்த குடிமக்களின் நலனைப் பாதிக்கும் இத்தகைய பாதகமான முடிவுகளை மத்திய அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். அஞ்சலகங்களிலும் வங்கிகளிலும் முதியோா் சேமிப்புக்கான வட்டி விகிதத்தை கணிசமாக உயா்த்த வேண்டும்.
ஓய்வூதியத் தொகைக்கு வருமான வரிவிலக்குச் சலுகை வழங்க வேண்டும். ஊழியா் நலன்களுக்கு எதிரான ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். அரசு பொதுக்காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் அனைவரையும் 1995-ஆம் ஆண்டு ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.