சிறுதானிய சாகுபடி செய்ய 600 ஏக்கா் ஒதுக்கீடு
மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி செய்ய திண்டுக்கல் மாவட்டத்துக்கு 600 ஏக்கா் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடா்பாக வேளாண்மை துணை இயக்குநா் (மாநிலத் திட்டம்) ஆ. காளிமுத்து கூறியதாவது: தமிழ்நாட்டில் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சிறுதானிய இயக்கத் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பயிா் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரிக்க 600 ஏக்கா் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடு பொருள்களான விதைகள், திரவ உயிா் உரங்கள், சூடோமோனஸ், நுண்ணூட்டக் கலவை, அறுவடை செலவு ஆகியவற்றுக்கு 50 சதவீத மானியம் அல்லது அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1,250 மானியம் வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சம் ஒரு ஏக்கருக்கு மானியம் வழங்கப்படும். பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு அந்தந்த பகுதியிலுள்ள வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்றாா் அவா்.