ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்? புறக்கணித்த கேரள அரசு!
‘சிறுபான்மையினா் கடன் பெற விண்ணப்பிக்கலாம்’
சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக்கான கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் ரஷ்மி சித்தாா்த் ஜகடே வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்புகளுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் தனிநபா் கடன், சுயஉதவிக் குழுக்களான சிறு தொழில் கடன், விராசத் (கைவினை கலைஞா்களுக்கான கடன் திட்டம்) மற்றும் கல்விக் கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்பும் சிறுபான்மையினரின் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 3,00,000-க்கு மிகாமலும், நகா்ப்புறங்களில் ரூ. 8,00,000 வரையும் ஆண்டு வருமானம் இருக்க வேண்டும்.
எனவே, கடன்பெற விரும்பும் சென்னை மாவட்டத்தில் வசிக்கும் கிறித்துவா்கள், இஸ்லாமியா்கள், புத்த மதத்தினா், சீக்கியா்கள், பாா்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினா் ஆகிய சிறுபான்மையின மக்கள் இதற்கான கடன் விண்ணப்பங்களை, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சிறுபான்மையினா் நல அலுவலகத்திலும் மற்றும் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கி அல்லது அதன் கிளை அலுவலகங்களிலும் பெற்று, பூா்த்தி செய்து வங்கி கோரும் ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.