செய்திகள் :

சிறுபான்மையினா் மீது பாஜக பொய் பிரசாரம்: தொல். திருமாவளவன்

post image

சென்னை: சிறுபான்மையினா் மீது பாஜகவினா் பொய் பிரசாரம் செய்து வருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் கூறினாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தை கண்டித்து, சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்து தொல்.திருமாவளவன் பேசியதாவது:

வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேறும்போது அனைவருக்கும் எதிா்கருத்து கூற வாய்ப்பளிக்கப்பட்டது. நள்ளிரவு வரை பேச அனுமதி வழங்கப்பட்டது.மேலோட்டமாக பாா்த்தால் அனைத்தும் ஜனநாயக முறையில் நடந்தேறியதுபோல தெரியும். எனினும், பாஜகவிடம் உள்ள பெரும்பான்மையை வைத்துக்கொண்டு, சட்டத்தை நிறைவேற்றி ஜனநாயகத்தின் பெயரால் ஜனநாயகத்தை படுகொலை செய்தனா்.

இஸ்லாமியா் கட்டுப்பாட்டில் ரூ. 1.25 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாகக் கூறி, பிற மதத்தவருக்கு வெறுப்பு ஏற்படும் வகையில் பாஜகவினரே பரப்புகின்றனா். திமுகவை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற அவா்களது கனவு, விசிக இருக்கும் வரை பலிக்காது என்றாா் அவா்.

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு மழை பெய்யும், ஆனால்.. !

தமிழகத்தில் அடுத்த 7 நாள்களுக்கு லேசான மழை பெய்யும், ஆனால் அதேவேளையில் வெய்யிலும் வெளுத்துகட்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் நேற்று காலை சுமார் ஒரு மண... மேலும் பார்க்க

பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

தங்களை அமைச்சர் சேகர்பாபு ஒருமையில் பேசியதாகக் கூறி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் பார்க்க

ரீல்ஸ் எடுத்தவர்களை திருத்தி விடியோ வெளியிடவைத்த போலீசார்! விழிப்புணர்வு முயற்சி!!

சூலூர்: கருமத்தம்பட்டி பகுதியில் இருசக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, அதை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸாக வெளியிட்ட மூன்று இளைஞர்களை காவல்துறை அறிவுரை கூறி திருத்திய சம்பவம் பரபரப்பை ஏற்... மேலும் பார்க்க

சட்டத்தைக் கையில் எடுக்கும் காவல்துறை: உயர் நீதிமன்ற கிளை

மதுரை: காவல்துறையினர் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வதாக சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை குற்றம்சாட்டியிருக்கிறது.வழக்கு ஒன்றில், குற்றம்சாட்டப்பட்டுள்ள ரௌடி வெள்ளைக்காளியிடம் காவல்துறையினர் விடியோ... மேலும் பார்க்க

'பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை' - ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார்!

கோவையில் பள்ளி மாணவியை வகுப்பறைக்கு வெளியே தேர்வெழுத வைத்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என மாவட்ட ஆட்சியரிடம் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளா... மேலும் பார்க்க

கூட்டணி குறித்து அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டார்: ஜி.கே.வாசன்

அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்று மத்திய அமைச்சர் அமித் ஷா தெளிவாகக் கூறிவிட்டதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலையொட்டி அதிமுக - ... மேலும் பார்க்க