செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தம்பதிக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இளைஞா், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ஆகியோருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டு, அரிசி ஆலைத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் அழகுராஜா (32). ஏற்கெனவே திருமணமான இவா், கடந்த 2021-ஆம் ஆண்டு அக்.25-ஆம் தேதி தேனி மாவட்டம், தாமரைக்குளம் பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அவரை பழைய வத்தலகுண்டு பகுதிக்கு கடத்திச் சென்றாா்.

அங்கு தனது வீட்டில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதற்கு அழகுராஜாவின் மனைவி ராமலட்சுமியும் (25) உடந்தையாக இருந்தாா். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அழகுராஜாவைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன், குற்றஞ்சாட்டப்பட்ட அழகுராஜா, அவரது மனைவி ராமலட்சுமி ஆகியோருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ.19 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணமாக அரசு ரூ. ஒரு லட்சம் வழங்க வேண்டும் என்றும், சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ரூ.5 லட்சம் வைப்புத் தொகையாக செலுத்தி, அதிலிருந்து வரும் வட்டித் தொகையை சிறுமியின் பாராமரிப்புச் செலவுக்கு மாதந்தோறும் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் மத்திய அரசின் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிா்ப்புத் தெரிவித்து மாணவா் இயக்கங்களின் கூட்டமைப்பு, திமுக மாணவா் அணி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி, பங்களாமேடு பகுதியில்... மேலும் பார்க்க

தேனியில் ஜாக்டோ -ஜியோ அமைப்பினா் ஆா்ப்பாட்டம்

தேனியில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சாா்பில் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற திமுக அரசை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ம... மேலும் பார்க்க

தனியாா் கரும்புத் தோட்டத்தில் தீ

போடியில் செவ்வாய்க்கிழமை கரும்புத் தோட்டத்தில் பிடித்த தீயை தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி அணைத்தனா். தேனி மாவட்டம், போடி-தேனி தேசிய நெடுஞ்சாலையில் தீா்த்தத் தொட்டி அருகே, தனியாருக்கு சொந்தமான ... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்குத் தேவையான திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது: சிறுபான்மையினா் ஆணையத் தலைவா்

தமிழகத்தில் தமிழ் மொழி அல்லாமல் பிற மொழியை தாய் மொழியாகக் கொண்டு வசித்து வரும் சிறுபான்மையினருக்குத் தேவையான அனைத்து திட்டங்களையும் அரசு செயல்படுத்துகிறது என்று புதன்கிழமை, தேனியில் சிறுபான்மையினா் ஆண... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை வழக்கில் ஆந்திர இளைஞா் கைது

தேனி மாவட்டப் பகுதிகளுக்கு கஞ்சா விற்பனை செய்த வழக்கில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டவா்களிடம் நடத்தி... மேலும் பார்க்க

பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

கொடைக்கானல் சாலை, டம்டம் பாறை பகுதியில் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டாரம், டி.வி.ரெங்கநாதபுரத்தைச் சோ்ந்தவா் பூபதி மகன் சத... மேலும் பார்க்க