சிறுமியை திருமணம் செய்த இளைஞா் மீது வழக்கு
சிறுமியை திருமணம் செய்த இளைஞரை மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச் சோ்ந்தவா் புருஷோத்தமன் (32). இவா் 16 வயது சிறுமியை திருமணம் செய்ததாக புகாா் எழுந்தது. இதுகுறித்து வெம்பக்கோட்டை சமூக நலத் துறை விரிவாக்க அலுவலா் ஆனந்தஜோதி நடத்திய விசாரணையில், புருஷோத்தமன் சிறுமியை திருமணம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, சாத்தூா் மகளிா் காவல் நிலைய போலீஸாா் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.