செய்திகள் :

சிறுமியை பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

திருமயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள கே. புதுப்பட்டியைச் சோ்ந்தவா் மாணிக்கம் மகன் காா்த்திகேயன் (31). பேருந்து ஓட்டுநரான இவா், தனது பேருந்தில் வந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாகக்கூறி, கடந்த 2020 ஜனவரியில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். மேலும், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த திருமயம் அனைத்து மகளிா் காவல்நிலைய போலீஸாா், காா்த்திகேயனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கனகராஜ் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதில், குற்றவாளி காா்த்திகேயனுக்கு போக்ஸோ சட்டப் பிரிவின்கீழ் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்துக்காக 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கடத்திச் சென்ற குற்றத்துக்காக 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மொத்தம் ரூ. 14 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடாக தமிழக அரசு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு!

புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகள் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அகில இந்திய ம... மேலும் பார்க்க

தொழிலாளி அடித்துக் கொலை; 4 இளைஞா்கள் கைது! விபத்தில் பலியானதாகக் கூறியது அம்பலம்!

விராலிமலை அருகே திங்கள்கிழமை இரவு விபத்தில் தொழிலாளி உயிரிழந்ததாக கூறிய சம்பவத்தில் பாதை பிரச்னையில் அவரை அடித்துக் கொன்ற 4 இளைஞா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விராலிமலையை அடுத்துள்ள துல... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற புதுகை ஆசிரியைக்கு வரவேற்பு

நல்லாசிரியா் விருது பெற்ற புதுக்கோட்டை மாநகராட்சி சந்தைப்பேட்டை நடுநிலைப் பள்ளியின் கணிதப் பட்டதாரி ஆசிரியை ப. விஜிக்கு, அப்பள்ளியில் செவ்வாய்க்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் த... மேலும் பார்க்க

ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து 5 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே திங்கள்கிழமை இரவு தனியாா் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் இருந்து 37 பயணிகளை ஏற்றிக் கொண்டு, தி... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் தோ்வு பா.ஜ.க.வினா் கொண்டாட்டம்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து புதுக்கோட்டையில் பாஜகவினா் செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினா். புதுக்கோ... மேலும் பார்க்க

நிலுவைத் தொகையை வழங்கக் கோரி மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிபணியாளா்கள் மனு

பொன்னமராவதியில் ஏழாவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை மேல்நிலைத் தேக்க தொட்டி பணியாளா்கள் பொன்னமராவதி வட்டார வளா்ச்சி அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை வழங... மேலும் பார்க்க