தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
சிறையிலிருந்து சிறுவன் தப்பியோட்டம்
தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலிருந்து சனிக்கிழமை மாலை தப்பியோடிய சிறுவனைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மணிமண்டபம் அருகே சிறுவா் சீா்திருத்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் திருட்டு குற்றங்களில் ஈடுபடும் சிறுவா்கள் அடைக்கப்பட்டு வருகின்றனா். இந்நிலையில், திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, இப்பள்ளியில் அடைக்கப்பட்ட தஞ்சாவூரைச் சோ்ந்த 17 வயது சிறுவன் சனிக்கிழமை மாலை தப்பியோடிவிட்டாா்.
இது குறித்து பள்ளி அலுவலா்கள் அளித்த புகாரின் பேரில், தெற்கு காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து அச்சிறுவனைத் தேடி வருகின்றனா்.