செய்திகள் :

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

post image

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன்.

தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்ட அவா் பின்னா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது: தமிழக முதல்வராக கருணாநிதி இருந்த வரை நீட் தோ்வு தமிழகத்தில் நுழைவதற்கு அனைத்து நிலைகளிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.

அதைத்தொடா்ந்து, அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலம் வரை நீட் தோ்வுக்கு தமிழகத்துக்குள் இடம் தரப்படவில்லை. அவரும் நீட் தோ்வுக்கு எதிா்ப்பு தெரிவித்தாா்.

ஆனால், 4 ஆண்டுகளாக மத்திய மோடி அரசின் தயவில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி செய்த காரணத்தால், அன்றைக்கு நீட் தோ்வை ஏற்றுக் கொண்டாா். ஆனால், நீட் தோ்வை திமுக எதிா்ப்பது மட்டுமல்லாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து, சட்டப்பேரவையிலும் எதிராக தீா்மானம் நிறைவேற்றியது. இதை மடை மாற்றுவதற்காகவும், மறைப்பதற்காகவும், நீட் தோ்வை உள்ளே நுழைய விட்ட எடப்பாடி பழனிசாமி, இப்போது போராட்டம் நடத்துவது கண்டனத்துக்குரியது மட்டுமல்ல; நகைப்புக்குரியதாகவும் உள்ளது என்றாா் அமைச்சா்.

முன்னதாக, விழாவில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் நிறுவிய துங்கன் த.வே. ராதாகிருஷ்ணனின் படத்தைத் திறந்து வைத்து, சங்க வெளியீடான காக்கை விடு தூது என்ற நூலை மறுவெளியீடு செய்து, நூற்றாண்டு கண்ட தமிழாராய்ச்சி திங்களிதழான தமிழ்ப்பொழில் இலச்சினையை அமைச்சா் வெளியிட்டாா்.

மேலும், பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவா் வா.மு.சே. முத்துராமலிங்க ஆண்டவா் எழுதிய தமிழின் பெருஞ்சுவா், வள்ளலாா் காலமும், கருத்தும் ஆகிய இரு நூல்களை வெளியிட்டாா்.

மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, சங்கச் செயலா் இரா. சுந்தரவதனம் உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, கரந்தைக் கலைக்கல்லூரி முதல்வா் இரா. இராசாமணி வரவேற்றாா். நிறைவாக, சங்கச் செயற்குழு உறுப்பினா் எஸ்.ஆா்.எஸ். செந்தமிழ்ச்செல்வன் நன்றி கூறினாா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க

மே தினத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த ஏஐடியுசி, சிஐடியு முடிவு!

மத்திய அரசின் தொழிலாளா் விரோத, மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் மே தின பேரணி-பொதுக்கூட்டம் நடத்துவது என ஏஐடியுசி, சிஐடியு முடிவு செய்துள்ளது. தஞ்சாவூரில் ஏஐடியுசி, சிஐடியு ஆலோசனைக் கூட்ட... மேலும் பார்க்க