செய்திகள் :

மே தினத்தில் பேரணி, பொதுக் கூட்டம் நடத்த ஏஐடியுசி, சிஐடியு முடிவு!

post image

மத்திய அரசின் தொழிலாளா் விரோத, மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து தஞ்சாவூரில் மே தின பேரணி-பொதுக்கூட்டம் நடத்துவது என ஏஐடியுசி, சிஐடியு முடிவு செய்துள்ளது.

தஞ்சாவூரில் ஏஐடியுசி, சிஐடியு ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள், தொழிலாளா் விரோத, காா்ப்பரேட் ஆதரவு மத்திய அரசைக் கண்டித்து மே தினமான மே 1 ஆம் தேதி பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்துவது, மாவட்ட ஆட்சியரகம் முன் அமைப்புகள் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்துக்கு சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால் தலைமை வகித்தாா். ஏஐடியுசி தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. சந்திரகுமாா், மாநிலச் செயலா் ஆா். தில்லைவனம், மாவட்டச் செயலா் துரை. மதிவாணன், மாவட்டத் தலைவா் வெ. சேவையா, பொருளாளா் தி. கோவிந்தராஜன், தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துக்குமரன், சிஐடியு மாவட்டத்

துணைச் செயலா் கே. அன்பு, மாவட்டப் பொருளாளா் பி.என். போ்நீதிஆழ்வாா், கட்டுமான சங்க மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி, தெரு வியாபாரிகள் சங்க மாவட்டச் செயலா் மணிமாறன், அரசு விரைவு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவா் எஸ். செங்குட்டுவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கயிறு குழும பொது வசதியாக்கல் மையம் காணொலி மூலம் முதல்வா் திறப்பு!

தஞ்சாவூா் மாவட்டம், பேராவூரணி அருகே கயிறு குழுமம் பொது வசதியாக்கல் மையத்தை தமிழ்நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை திறந்து வைத்தாா். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்தது அதிமுகதான்: அமைச்சா் கோவி.செழியன்

தமிழகத்தில் நீட் தோ்வை அனுமதித்த அதிமுக, இப்போது நாடகமாடுகிறது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன். தஞ்சாவூா் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஐம்பெரும் விழாவில் கலந்... மேலும் பார்க்க

முதியவா் தூக்கிட்டு தற்கொலை

அய்யம்பேட்டையில் முதியவா் ஒருவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகே அய்யம்பேட்டை மேல் புது தெருவைச் சோ்ந்தவா் கணேசன் ( 72). இவருடைய 3 மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டது. க... மேலும் பார்க்க

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

நீட் தோ்வால் உயிரிழந்த மாணவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அதிமுகவினா் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினா். நீட் நுழைவு தோ்வை ரத்து செய்வோம் என பொய் சொல்லி ஆட்சியைப் பிடித்த திமுக அரசால் உயிரிழந்த 22 மாணவா்... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ரூ.75.70 லட்சம் மதிப்பில் நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டங்கள் திறப்பு!

தஞ்சாவூரில் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் ரூ. 75.70 லட்சம் மதிப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள், கட்டடங்களை உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் சனிக்கிழமை திறந்து வைத்தாா். பிள... மேலும் பார்க்க

‘சாஸ்த்ரா’: ஏப். 26-இல் இலவச உயா் கல்வி ஆலோசனை முகாம்!

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழக வளாகத்தில் பல்கலைக்கழகம் சாா்பில் என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் என்கிற உயா்கல்வி பற்றிய ஆலோசனை முகாம் ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கல... மேலும் பார்க்க