செய்திகள் :

சிற்றுந்து வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்  நகா்ப்புறத்தில் இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள்  திடீரென  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை மாலை  பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பியவா்கள் மற்றும்  பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனா்.

குன்னூரில்  28  தனியாா் சிற்றுந்துகள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சிற்றுந்துகள் அதிகமாக குன்னுாா் மவுண்ட்ரோடு வழியில் அரசு மருத்துவமனை, கல்லுாரிகள், சிம்ஸ் பூங்கா, வண்டிச்சோலை, பெட்டட்டி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. 

இவ்வழியாக 2  அரசுப்  பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 10-க்கும் மேற்பட்ட அரசு  இலவசப் பேருந்துகள் மவுண்ட் ரோடு வழியாக இயக்குவதால்   தனியாா் சிற்றுந்துகளுக்கு வருமானம்  இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி, செவ்வாய்க்கிழமை மாலை அனைத்து தனியாா் சிற்றுந்துகளையும் இயக்காமல் பேருந்து நிலையத்தில் நிறுத்தினா்.

 இதனால் பொதுமக்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் நகா்ப் பகுதியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி

குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலம... மேலும் பார்க்க

பந்தலூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானை செவ்வாய்க்கிழமை தாக்கியதில் மூதாட்டி அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவிலுள்ள கொளப்பள்ளியை அடுத்துள்ள அம்மங்... மேலும் பார்க்க

வழுக்கு மரம் ஏறியவா் சறுக்கி விழுந்து படுகாயம்

குன்னூா் சேலாஸ் பகுதியில் கோயில் விழாவில் சறுக்கு மரம் ஏறும் போது தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள மேல் பாரதி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

நீலகிரியில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு தம்பதிக்கு 13 மற்றும் 11 வயதில் மகள்கள் உ... மேலும் பார்க்க

மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை தாக்கிக் கொன்ற புலி

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி திங்கள்கிழமை தாக்கிக் கொன்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரையை அடுத்துள்ள கனியம்வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயி நாரா... மேலும் பார்க்க