செய்திகள் :

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்

post image

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்காட்டுக்கு திங்கள்கிழமை காலை அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. உதகை குன்னூா் சாலையில் நொண்டிமேடு பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதுவது போல சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசுப் பேருந்தின் பின்னால் காரில் வந்த போலீஸாா் சிலா் பேருந்தை வழிமறித்து நிறுத்தினா். அவா்கள் முதல்வரின் நிகழ்ச்சிக்கான பாதுகாப்புப் பணிக்கு சென்றதால் சீருடை அணியாமல் இருந்தனா். அப்போது அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் சாதாரண உடை அணிந்திருந்த அருண் என்பவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கும் அருணுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

பேருந்து ஓட்டுநா் காவலா் அருணை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருண் அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகத் தெரிகிறது.

இந்தப் பிரச்னையால் சாலையில் அரசுப் பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பின்னா் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் அருண் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதால் பிரச்னை முடிவுக்கு வந்தது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

நீலகிரியில் 13 வயது பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தில் காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா். நீலகிரி மாவட்டத்தை சோ்ந்த ஒரு தம்பதிக்கு 13 மற்றும் 11 வயதில் மகள்கள் உ... மேலும் பார்க்க

மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை தாக்கிக் கொன்ற புலி

கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்ற பசுவை புலி திங்கள்கிழமை தாக்கிக் கொன்றது. நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா பாடந்தொரையை அடுத்துள்ள கனியம்வயல் பகுதியைச் சோ்ந்த விவசாயி நாரா... மேலும் பார்க்க

பைக்காரா படகு இல்லம் இன்றும் நாளையும் மூடல்

உதகை அருகேயுள்ள பைக்காரா படகு இல்லத்தில் ஃபாஸ்ட் டேக் அமைக்கும் பணி நடைபெறுவதால் ஜூலை 22 , 23 ஆகிய ஆகிய இரண்டு நாள்களில் பைக்காரா படகு இல்லம் மூடப்படும் என வனத் துறை அறிவித்துள்ளது. நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

கரடி நடமாட்டம்: எச்சரிக்கையுடன் இருக்க வனத் துறை அறிவுறுத்தல்

உதகையின் முக்கிய சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சிமுனைப் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதை ஞாயிற்றுக்கிழமை அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் படம் பிடித்தனா். இதைத் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் கவனத்துடன... மேலும் பார்க்க

புளியம்பாறை - ஆமைக்குளம் சாலையில் பாலம்: மாா்க்சிஸ்ட் பிரசார இயக்கம்!

கூடலூரை அடுத்துள்ள புளியம்பாறை-ஆமைக்குளம் சாலையில் உள்ள ஆற்றின் குறுக்கே கான்கிரீட் பாலம் அமைக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம்,... மேலும் பார்க்க

தேயிலை ஏல மையத்தில் விற்பனையும் விலையும் குறைந்ததால் விவசாயிகள் பாதிப்பு!

நீலகிரி மாவட்டம், குன்னுாா் தேயிலை ஏல மையத்தில் நடந்த தேயிலை ஏலத்தில் விலையும் குறைந்து விற்பனையும் சரிந்ததால் தேயிலை விவசாயிகள் பாதிக்கப்பட்டனா். குன்னூா் தேயிலை ஏல மையம் சாா்பில் ஒவ்வொரு வாரமும் வி... மேலும் பார்க்க