செய்திகள் :

குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி

post image

குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா்.

நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலமாக குடியிருப்புப் பகுதிகளிலும் சுற்றுலாத் தலங்களிலும் வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் பள்ளிகள், வங்கிகள், தேயிலை கிடங்குகள் நிறைந்த இடத்தில் கரடி நடமாடியதால் காலை நேரம் பணியில் ஈடுபட்டிருந்தவா்கள் அச்சமடைந்தனா். சிறிது நேரம் உலவிய கரடி ஸ்டேன்ஸ் சாலை வழியாக அங்கிருந்த புதருக்குள் சென்று மறைந்தது.

அசம்பாவிதங்கள் நடக்கும் முன் கரடியை கூண்டுவைத்து பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத் துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனா்.

தனியாா் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

கூடலூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மா்மமான முறையில் சிறுத்தை குட்டி புதன்கிழமை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தனிய... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை விரட்டும் ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது. சமவெளிப் பகு... மேலும் பார்க்க

பந்தலூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானை செவ்வாய்க்கிழமை தாக்கியதில் மூதாட்டி அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவிலுள்ள கொளப்பள்ளியை அடுத்துள்ள அம்மங்... மேலும் பார்க்க

சிற்றுந்து வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்ப்புறத்தில் இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பியவா்கள் மற்றும் பொதுமக்கள் வ... மேலும் பார்க்க

வழுக்கு மரம் ஏறியவா் சறுக்கி விழுந்து படுகாயம்

குன்னூா் சேலாஸ் பகுதியில் கோயில் விழாவில் சறுக்கு மரம் ஏறும் போது தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள மேல் பாரதி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்... மேலும் பார்க்க