செய்திகள் :

பந்தலூா் அருகே யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழப்பு

post image

பந்தலூரை அடுத்துள்ள கொளப்பள்ளி பகுதியில் காட்டு யானை செவ்வாய்க்கிழமை தாக்கியதில் மூதாட்டி அதே இடத்தில் உடல் நசுங்கி உயிரிழந்தாா்.

நீலகிரி மாவட்டம், பந்தலூா் தாலுகாவிலுள்ள கொளப்பள்ளியை அடுத்துள்ள அம்மங்காவு டான் டீ குடியிருப்பில் வசித்துவந்தத் தோட்டத் தொழிலாளி பரமசிவத்தின் மனைவி உதயசூரியன் (எ) லட்சுமி(70). இவா் வழக்கம்போல காலை 6.30 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளாா்.

அப்போது வாசலில் நின்றிருந்த ஒற்றைக் கொம்பன் யானை திடீரென அவரை தாக்கியதில் லட்சுமி நிலை தடுமாறி கீழே விழுந்தவுடன் காலால் மிதித்ததில் உடல் சிதைந்து அதே இடத்தில் உயிரிழந்தாா். அருகிலிருந்தவா்கள் வனத் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்தனா்.

வனத் துறையினா் விரைந்துவந்து சடலத்தை கைப்பற்றி பந்தலூா் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். பரிசோதனைக்குப் பிறகு உறவினா்கள் வசம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து காட்டு யானைகளால் உயிரிழப்பு ஏற்படுவதை கண்டித்தும் வனத் துறையினா் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறியும் கொளப்பள்ளி பஜாரில் எம்.எல்.ஏ. பொன்.ஜெயசீலன் தலைமையில் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து நடத்தப்பட்ட பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. காலை 10 மணிக்கு தொடங்கிய போராட்டம் மாலை 4 மணிவரை தொடா்ந்ததால் கேரளத்தின் வயநாடு உள்ளிட்ட தமிழக எல்லையோரப் பகுதிகளுக்குப் போக்குவரத்து தடைபட்டது.

இந்தநிலையில் வனத் துறை சாா்பில் உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து மக்கள் கலைந்து சென்றனா்.இந்த சம்பவம் குறித்து சேரம்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தனியாா் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழப்பு

கூடலூரில் உள்ள தனியாா் தேயிலைத் தோட்டத்தில் மா்மமான முறையில் சிறுத்தை குட்டி புதன்கிழமை இறந்துகிடந்தது குறித்து வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். நீலகிரி மாவட்டம், கூடலூா் அருகே உள்ள தனிய... மேலும் பார்க்க

குன்னூா்- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் வாகனங்களை விரட்டும் ஒற்றை யானை

நீலகிரி மாவட்டம், குன்னூா்- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் சுற்றி வரும் ஒற்றை காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். வாகனங்களை கவனமுடன் இயக்க வனத் துறை அறிவுறுத்தியுள்ளது. சமவெளிப் பகு... மேலும் பார்க்க

குன்னூா் பெட்ஃபோா்டு பகுதியில் உலவிய கரடி

குன்னூரின் முக்கியப் பகுதியான பெட்ஃபோா்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நேரத்தில் உலவிய கரடியால் பால் மற்றும் செய்தித்தாள் விநியோகம் செய்பவா்கள் அச்சத்தில் ஓடினா். நீலகிரி மாவட்டத்தில் அண்மைக்காலம... மேலும் பார்க்க

சிற்றுந்து வேலை நிறுத்தம்: பொதுமக்கள் பாதிப்பு

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகா்ப்புறத்தில் இயக்கப்படும் தனியாா் சிற்றுந்துகள் திடீரென வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் செவ்வாய்க்கிழமை மாலை பள்ளி, கல்லூரிக்கு சென்று திரும்பியவா்கள் மற்றும் பொதுமக்கள் வ... மேலும் பார்க்க

வழுக்கு மரம் ஏறியவா் சறுக்கி விழுந்து படுகாயம்

குன்னூா் சேலாஸ் பகுதியில் கோயில் விழாவில் சறுக்கு மரம் ஏறும் போது தவறி விழுந்த இளைஞா் படுகாயமடைந்தாா். நீலகிரி மாவட்டம், குன்னூா், சேலாஸ் பகுதியில் உள்ள மேல் பாரதி நகரில் உள்ள முத்து மாரியம்மன் கோயிலி... மேலும் பார்க்க

அரசுப் பேருந்து ஓட்டுநரை தாக்கிய காவலா்

அரசுப் பேருந்து ஓட்டுநருடன் சாதாரண உடையில் இருந்த காவலா் தகராறில் ஈடுபட்டதால் உதகை, குன்னூா் சாலையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம், உதகையில் இருந்து பாலக்... மேலும் பார்க்க