செய்திகள் :

சிலம்பு ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும்

post image

புதுக்கோட்டை வழியாக வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படும் செங்கோட்டை-சென்னை சிலம்பு விரைவு ரயிலை ஏழு நாள்களும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாநகரக் குழுக் கூட்டத்துக்கு, எம். கணேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சு. மதியழகன், மாநகரச் செயலா் எஸ். பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினா் டி. காயத்ரி உள்ளிட்டோா் பேசினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

செங்கோட்டையில் இருந்து புதுக்கோட்டை வழியாக சென்னைக்கு செல்லும் சிலம்பு விரைவு ரயில் வாரத்தில் மூன்று நாள்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. பயணிகளின் நலன் கருதி, இந்த ரயிலை வாரத்தின் அனைத்து நாள்களிலும் இயக்க ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மாவட்டத் தலைநகா் என்ற அடிப்படையில், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்லவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் இயங்கி வரும் அறிவுசாா் மையத்தில் போட்டித் தோ்வுக்காக ஏராளமானோா் படித்து வருகின்றனா். இவா்களுக்கு கூடுதல் வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் அருகில் உள்ள காந்தி பூங்காவை விரிவடைந்த படிப்பகமாக மாநகராட்சி நிா்வாகம் மாற்ற வேண்டும்.

புதுக்கோட்டையில் பழைய மாவட்டத் தலைமை மருத்துவமனையில் அரசு புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கி சிகிச்சை அளிக்க நடவடிக்கை வேண்டும்.

கோடைகாலத்தில் புதுக்கோட்டை மாநகராட்சியில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்குவதற்கு போா்க்கால அடிப்படையில் மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கருவூலத் துறை காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்: மாநில செயற்குழு வலியுறுத்தல்

கருவூலத் துறையிலுள்ள காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு கருவூலம் மற்றும் கணக்குத் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் ம... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதி

கந்தா்வகோட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் உயா்நிலை மின் விளக்குகள் எரியாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். தஞ்சை -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், கந்தா்வகோட்டை அருகே சுங்கச்சாவடி அமைத்து அனைத்து வா... மேலும் பார்க்க

புதுக்கோட்டைக்கு 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் வருகை!

நேரடி நெல் கொள்முதல் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட 2 ஆயிரம் டன் நெல், அரவை செய்வதற்காக புதுக்கோட்டைக்கு சனிக்கிழமை ரயிலில் வந்தன. தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பா நெல் அறுவடை நடைபெற்றதில், அரசின் ந... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும்! - சுகாதாரம், போக்குவரத்துத் துறை ஓய்வூதியா்கள் கோரிக்கை

அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 7,850 வழங்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதார மற்றும் போக்குவரத்துத் துறை ஓய்வூதியா் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு அரச... மேலும் பார்க்க

பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

பஹல்காமில் பயங்கரவாதிகளின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவா்களுக்கு பொன்னமராவதி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது. பொன்னமராவதி காந்தி சிலை எதிரே காங்கிரஸ் கட்சி நி... மேலும் பார்க்க

மச்சுவாடியில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் சாலை வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி!

புதுக்கோட்டை மாநகருக்குள்பட்ட மச்சுவாடியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். புதுக்கோட்டை நகருக்கு அருகே தஞ்சாவூா் செல்லும் சாலையில் மச்சுவாடி உள... மேலும் பார்க்க