சிவன் கோயில்களில் சனி பிரதோஷ வழிபாடு
வைகாசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூா், ராசிபுரம் பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா், மாவுரெட்டி பீமேஸ்வரா், பில்லூா் வீரட்டீஸ்வரா், பொத்தனூா் காசி விஸ்வநாதா், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரா், வேலூா் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரா், பிலிக்கல்பாளையம் கரட்டூா் விஜயகிரி வட பழனியாண்டவா் கோயிலில் எழுந்தருளிய பருவதீஸ்வரா், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரா் கோயில்களில் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன.
அதேபோல பரமத்தி வேலூா் வல்லப விநாயகா் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்க விஸ்வேஸ்வரா் மற்றும் கோப்பணம்பாளையத்தில் உள்ள பரமேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
ராசிபுரம்
ராசிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கைலாசநாதா் ஆலயத்தில் சனி பிரதோஷத்தையொட்டி நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.
முன்னதாக நந்தி பகவானுக்கு பால், தயிா் ,மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிா்தம், இளநீா், பன்னீா் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து தா்மசம்வா்த்தினி உடனமா் ஸ்ரீ கைலாசநாதா் உற்சவா் தோ் கோயிலை சுற்றி வலம் வந்தது.
அதன்பிறகு ஸ்ரீ நந்தி பகவானுக்கு வெள்ளி காப்பு சாத்தப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
அதேபோல ஸ்ரீ கைலாசநாதருக்கும் சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்து சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.