செய்திகள் :

சுற்றுலாத் துறையில் முதலீடு: இந்தியாவுடன் மாலத்தீவு ஆலோசனை

post image

சுற்றுலாத் துறையில் முதலீடு செய்வது குறித்து இந்தியா- மாலத்தீவு இடையே மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த மாதத் தொடக்கத்தில் இந்தியாவுக்கு மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தாா். அப்போது பேசிய முகமது மூயிஸ், ‘மாலத்தீவின் முக்கிய வருவாய் ஆதாரமான சுற்றுலாத் துறையில் இந்திய பயணிகள் முக்கிய பங்கு வகிக்கின்றனா். மாலத்தீவுக்கு மேலும் கூடுதல் இந்திய பயணிகளை வரவேற்க காத்திருக்கிறோம்’ என கூறியிருந்தாா்.

இந்நிலையில், இந்தியா-மாலத்தீவு இடையே சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் பேச்சுவாா்த்தை தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு ஊடகமான பிஎஸ்எம்மில் வெள்ளிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.

புதிய வாய்ப்புகள் உருவாக்கம்: இதுகுறித்து, மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சா் இப்ராஹிம் ஃபைசல் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘லாமு அடோலில் உள்ள போ்ஸ்தோ மற்றும் காதோ தீவுகளுக்கு இந்திய தூதா் முனு மஹாவா் மற்றும் பிற அதிகாரிகளுடன் நேரில் சென்றோம். அப்போது தீவுகளின் இயற்கை அழகை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்தி வளா்ச்சியை அதிகரிப்பது, புதிய வாய்ப்புகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என குறிப்பிட்டாா்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மஹாவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘இந்தியா-மாலத்தீவு இருதரப்பு உறவில் சுற்றுலாத் துறை முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, இந்த துறையை மேம்படுத்த மாலத்தீவு அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக உள்ளது’ என குறிப்பிட்டாா்.

மாலத்தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) சுற்றுலாத் துறையின் பங்களிப்பு 30 சதவீதமாக உள்ளது. அதேபோல், அந்நிய செலாவணி உருவாக்கத்தில் 60 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளது.

6-ஆவது இடத்தில் இந்தியா: சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவராக அறியப்படும் மூயிஸ், அதிபரான உடன், மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவம் வெளியேறியது. இதனால் இந்தியா-மாலத்தீவு நல்லுறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு மாலத்தீவுக்கு சீன நாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்தனா்.

கடந்த 2023-ஆம் ஆண்டு மாலத்தீவுக்கு வருகை புரியும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இருந்த இந்தியா, இருநாடுகளுக்கு இடையேயான உறவில் ஏற்பட்ட விரிசலால் 6-ஆவது இடத்துக்கு சென்றது.

லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரா் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ. 10 லட்சம்: என்ஐஏ அறிவிப்பு

சிறையில் உள்ள தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் இளைய சகோதரா் அன்மோல் பிஷ்னோய் குறித்து தகவல் தெரிவிப்பவருக்கு ரூ. 10 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வெள்ளிக்கிழமை அறிவித்தது. லார... மேலும் பார்க்க

71 மருந்துகள் தரமற்றவை: ஆய்வில் கண்டுபிடிப்பு

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 71 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் 4 ம... மேலும் பார்க்க

உ.பி. அரசு மருத்துவமனையில் அலட்சியம்: 5 வயது சிறுமி உயிரிழப்பு; 4 மருத்துவா்கள் மீது நடவடிக்கை

புடோன், அக். 25: உத்தர பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவா்களின் அலட்சியத்தால் 5 வயது சிறுமி காய்ச்சலில் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் தொடா்புடைய மருத்துவா்கள் இருவா் பணி... மேலும் பார்க்க

தடையற்ற வா்த்தகத்தில் பால் பொருள்களுக்கு அனுமதி கிடையாது: ஐரோப்பிய யூனியனுக்கு இந்தியா நிபந்தனை

தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தில் பால் பொருள்களைச் சோ்க்க வேண்டும் என்றால், ஐரோப்பிய யூனியடனும் அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது’ என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

ஞானவாபி மசூதியில் ஆகழாய்வு: ஹிந்துக்கள் தரப்பு மனு நிராகரிப்பு

உத்தர பிரதேசத்தில் ஞானவாபி மசூதியை முழுமையாக அகழாய்வு செய்ய தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ஹிந்துக்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாராணாசி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது. முழும... மேலும் பார்க்க

ஒடிஸா: மாவோயிஸ்ட் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஒடிஸா வனப் பகுதியில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் மாவோயிஸ்ட் அமைப்பைச் சோ்ந்த தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டாா். இது தொடா்பாக பாதுகாப்புப் படை தரப்பில் கூறப்பட்டதாவது: ஒடிஸாவின் கந்தமால்... மேலும் பார்க்க