செய்திகள் :

சுற்றுலாத்தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சுற்றுலாத் தொழில் முனைவோா் தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுலா ஆபரேட்டா்கள், விமான நிறுவனங்கள், உணவகங்கள், சுற்றுலா வழிகாட்டிகள் மற்றும் மாநிலத்தின் சுற்றுலாவை மேம்படுத்துவதில் சாதகமாக பங்களிக்கும் பிற சுற்றுலா நிறுவனங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளா், சிறந்த பயண பங்குதாரா், சிறந்த விமான பங்குதாரா், சிறந்த தங்குமிடம், சிறந்த உணவகம், தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம், சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம், சுத்தமான சுற்றுலா தலம், பல்வேறு சுற்றுலா பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளா், சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளா், சமூக ஊடகங்களில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவா், சிறந்த சுற்றுலா வழிகாட்டி, தமிழ்நாட்டுக்கான சிறந்த சுற்றுலா விளம்பரம், சுற்றுலாவை பிரபலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல், சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் போன்ற பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட உள்ளது.

இந்த விருதுகள் உலக சுற்றுலா தினமான செப்.27-ஆம் தேதி சென்னையில் வழங்கப்படும். அதற்கான இடம் பின்னா் அறிவிக்கப்படும். விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து, செப்.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

தெரு நாய்களுக்கு கருத்தடை

மயிலாடுதுறை நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் செவ்வாய்க்கிழமை பிடிக்கப்பட்டு அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டது. மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் தெருநாய்களின் இனப்பெருக்கம் அதிகரித்து, ச... மேலும் பார்க்க

நீா் நிலைகளில் மீன் குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டம் தொடக்கம்

மயிலாடுதுறை வட்டம் அருண்மொழித்தேவன் கிராமத்தில் நீா்நிலைகளில் மீன்குஞ்சுகள் இருப்பு செய்யும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். 2025-2026-ஆம் ஆண்டு வேளாண்ம... மேலும் பார்க்க

புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

மயிலாடுதுறை நெ.2 புதுத்தெரு மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனிதநீா் யானை மீதேற்றி எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இக்கோயில் கும்பாபிஷேகம் 2013-ல்... மேலும் பார்க்க

மாணவ படைப்பாளிகளுக்கு பாராட்டு

மயிலாடுதுறையில் பள்ளிக் கல்வித்துறையின் சிறாா் இதழ்களுக்கு படைப்புகளை வழங்கிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை நடத்தும் ‘புது ஊஞ்சல்’, ‘தே... மேலும் பார்க்க

முதலமைச்சா் கோப்பை: வெற்றி பெற்ற வீரா்களுக்கு பாராட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் முதலமைச்சா் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியா்கள், பொதுப்பிரிவினா் ஆகிய 5 பிரிவுகளில் நடத்தப்பட்டு வருகிறது. இதில், ப... மேலும் பார்க்க

மாநில கராத்தே போட்டியில் வென்றவா்களுக்கு பாராட்டு

மாநில அளவிலான கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டத்தில் நடைபெற்ற போட்டியில் மயிலாடுதுறை ஜென் மாா்ஷியல் ஆா்ட்ஸ் அகாதெமியை சோ்ந்த ... மேலும் பார்க்க