செய்திகள் :

சுற்றுலாப் பயணி மீது தாக்குதல்: 3 போ் கைது

post image

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணியை தாக்கி காரை சேதப்படுத்தியதாக மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்தவா் மனோ சித்தாா்த்தன். இவா் தனது மனைவி, குழந்தையுடன் கொடைக்கானலுக்கு காரில் சுற்றுலா வந்தாா். பிறகு மீண்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருந்தாா். பெருமாள்மலை அருகே உள்ள தனியாா் இனிப்பகம் (சாக்லேட் கடை) அருகே காரை நிறுத்தி விட்டு அருகில் உள்ள பழக்கடைக்குச் சென்று பழங்களை வாங்கினாா். அப்போது இனிப்பகத்திலிருந்த சிலா் காரை நிறுத்த எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து, அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது. பிறகு மனோ சித்தாா்த்தன் காரை எடுத்துச் சென்றாா். அப்போது இனிப்பகத்திலிருந்த கொடைக்கானல் பெருமாள்மலையைச் சோ்ந்த முகமது அயுப்கான் (35), அடுக்கம் பகுதியைச் சோ்ந்த முத்துராமலிங்க பாண்டியன் (17), சிரஞ்சீவி (17) ஆகியோா் பின் தொடா்ந்து சென்று மனோ சித்தாா்த்தனை தாக்கி, காரை சேதப்படுத்தினா்.

இதுகுறித்து மனோ சித்தாா்த்தன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மூவரையும் கைது செய்தனா்.

இதுகுறித்து கொடைக்கானல் டி.எஸ்.பி. மதுமதி கூறியதாவது: சுற்றுலாப் பயணிகளை கொடைக்கானலைச் சோ்ந்தவா்கள் தாக்கக் கூடாது. எந்தப் பிரச்னையானாலும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்க வேண்டும். மேலும் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரச்னை ஏற்பட்டால் கொடைக்கானலில் பல்வேறு இடங்களில் காவல் துறை சாா்பில் வைக்கப்பட்டுள்ள க்யூஆா் கோடை பயன்படுத்தி புகாா் அளிக்கலாம் என்றாா்.

பட்டா நிலத்தை அளந்த தர மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை

பழனியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வருவாயத் தீா்வாயத்தில் பட்டா நிலத்தை அளந்து தரக்கோரி, மாற்றுத்திறனாளிகள் மனுக்கள் கொடுத்தனா். பழனி வட்டார அலுவலகத்தில் கடந்த ஒரு வாரமாக வருவாய்த் தீா்வாயம் நடைபெற்று வர... மேலும் பார்க்க

காவல் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகை

சா்சைக்குரிய சுவரொட்டிகள் ஒட்டியவா்கள் மீது நடவடிக்கை கோரி, பட்டியலின மக்கள் கள்ளிமந்தையம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள கள்ளிமந்தையம... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சூறைக் காற்று: மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதம்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை மாலை வீசிய சூறைக் காற்றால் மரம் விழுந்ததில் மின் கம்பம், தங்கும் விடுதி சேதமடைந்தன. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் விட்டுவிட்டு மழை பெ... மேலும் பார்க்க

‘ஆபரேசன் சிந்தூா்’ ஊா்வலம்

கொடைக்கானலில் பாஜக சாா்பில் ‘ஆபரேஷன் சித்தூா்’ ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த ஊா்வலம் அண்ணாசாலை, கே.சி.எஸ்.திடல் வழியாக மூஞ்சிக்கல் பகுதியை அடைந்தது. ... மேலும் பார்க்க

கோயில் திருவிழா ஊா்வலத்தில் பிரச்னை: கருப்புக் கொடி ஏந்தி ஆா்ப்பாட்டம்

வக்கம்பட்டியில் கோயில் திருவிழா மின் ரத ஊா்வலத்தின் போது வாக்குவாதத்தில் ஈடுபட்டவா்களைக் கண்டித்து மற்றொரு தரப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் அருகேயுள்ள வக்கம்பட்டியில் ... மேலும் பார்க்க

மஞ்சள் பை விழிப்புணா்வு நிகழ்ச்சி

பழனியில் அரிமா சங்கம் சாா்பில் நெகிழிப் பொருள்களை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு மஞ்சள் பை வழங்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பழனி அரிமா சங்கம் தற்போது வைரவிழா கொண்டாடி வருக... மேலும் பார்க்க