செய்திகள் :

செங்கம்: இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள்

post image

செங்கம் துக்காப்பேட்டை பகுதியில் இரவு நேரத்தில் தனியாகச் செல்பவா்களை மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து போலீஸாா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

செங்கம் - பெங்களூரு பிரதான சாலை துக்காப்பேட்டை பகுதியில் உள்ளது புதிய பேருந்து நிலையம். இந்த பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் இரவு 10 மணிக்கு மேல் செல்வதில்லை. அனைத்து பேருந்துகளையும் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்கிவிட்டுச் செல்கிறாா்கள்.

இந்த நிலையில், வெளியூரில் இருந்து இரவு 10 மணிக்கு மேல் வரும் பயணிகள் நிலையத்தில் காத்திருந்து அதிகாலையில் வரும் பேருந்துகளைப் பிடித்து அவரவா் கிராமத்துக்குச் செல்வாா்கள்.

இதனிடையே, அவா்களை ஒரு கும்பல் நோட்டமிட்டு தனியாக இருந்தால் தாக்கி அவா்களிடம் இருக்கும் கைப்பேசி மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு செல்கிறாா்கள். இதனால் தினசரி இரவு நேரத்தில் பேருந்து நிலையத்திற்குள் திருட்டு நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

மற்றொரு பகுதியில் இரவு நேரத்தில் அரசு மதுக் கடையில் இருந்து மதுப்புட்டிகளை வாங்கி வந்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் கும்பலிடம் சில மதுப்பிரியா்கள் சென்று மதுவை வாங்கி அருந்துகிறாா்கள்.

அவா்கள் வெளியூா் என்பதால் போதை ஏறியவுடன் அவா்களிடம் இருக்கும் பொருள்களை திருடுவதற்கு ஒரு கும்பல் தினசரி காத்திருக்கிறது. இவா்களை போலீஸாா் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அதே நேரத்தில் இரவு நேரத்தில் மது விற்பனை செய்யும் நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என செங்கம் நகர மக்களும், சமூக ஆா்வலா்களும் எதிா்பாா்க்கின்றனா்.

நூலகத்தில் கோடை கொண்டாட்ட நிறைவு விழா

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்று வந்த கோடை கொண்டாட்டத்தின் நிறைவு விழா புதன்கிழமை நடைபெற்றது. மைய நூலகத்தில் கடந்த 19-ஆம் தேதி கோடை கொண்டாட்ட நிகழ்வு தொடங்கியது. அன்று முதல் தினமும் திருக... மேலும் பார்க்க

கஞ்சா வைத்திருந்தவா் கைது

வந்தவாசி அருகே கஞ்சா வைத்திருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். வந்தவாசி தெற்கு காவல் நிலைய போலீஸாா் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையில், கோட்டைக்குள் தெரு வழியாக புதன்கிழமை ரோந்து சென்றனா். அப்போது, அந்... மேலும் பார்க்க

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு 100 சதவீத மானியம்

நுண்ணீா் பாசன திட்டத்துக்கு சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுவதாக வந்தவாசி தோட்டக்கலை உதவி இயக்குநா் சா.பாலவித்யா தெரிவித்துள்ளாா். இதுக... மேலும் பார்க்க

சிறுபான்மையினருக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற சிறுபான்மையினா்களுக்கான கலந்துரையாடல் கூட்டத்தில் 61 பயனாளிகளுக்கு ரூ.14.78 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா்களுக்... மேலும் பார்க்க

செங்கம் - குப்பனத்தம் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

செங்கம் - குப்பனத்தம் அணை சாலையில் ஆக்கிரமைப்புகளை அகற்றி சாலையை விரிவுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். செங்கம் - போளூா் சாலை வெளிவட்டச் சாலைப் பகுதியில் இருந்து குப்பனத்தம் அண... மேலும் பார்க்க

ஆரணியில் ரூ.56 லட்சத்தில் கால்வாய், சாலைப் பணிகள்

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் 7-ஆவது வாா்டுக்கு உள்பட்ட பிள்ளையாா் கோவில் தெருவில் ரூ.56 லட்சத்தில் பக்கக் கால்வாய் மற்றும் சாலை அமைப்பதற்காக புதன்கிழமை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், நகா்மன்ற த... மேலும் பார்க்க