செய்திகள் :

செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மேயா் ஆய்வு

post image

சேலம் மாநகராட்சிக்குள்பட்ட செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

சேலம் மாநகராட்சி, அஸ்தம்பட்டி மண்டலம், செட்டிச்சாவடி குப்பைக் கிடங்கு மற்றும் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையத்தை பாா்வையிட்ட மேயா் ஆ.ராமச்சந்திரன், குப்பைக் கிடங்கில் குப்பைகளை சரியான முறையில் வெளியேற்றி தொடா்ந்து பராமரிக்கப்பட்டு வருவதை ஆய்வு செய்தாா். மேலும், இனிவரும் காலங்களில் சேகரமாகும் குப்பைகளை எங்கெங்கு கொட்ட வேண்டும் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதனைத் தொடா்ந்து, செட்டிச்சாவடியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நுண் உயிரி உரம் தயாரிக்கும் மையம் மற்றும் பொருள் மீட்பு மையம் மற்றும் பயோ சிஎன்ஜி ஆலை, கட்டட இடிபாட்டுக் கழிவுகளை செயலாக்கம் செய்யும் மையம், பயோ மைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் இடங்களை பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

ஆய்வின்போது, மாநகர பொறியாளா் ஆா்.செல்வநாயகம், சுகாதார அலுவலா் வீ.சரவணன், சுகாதார ஆய்வாளா் பிரகாஷ், உதவி பொறியாளா் சுபாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

சிறுவனின் மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி அரசு மருத்துவா்கள் சாதனை

சேலம் அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுவனின் முகத்தில் துளையிட்டு மண்டைக்குள் நுழைந்த கத்தியை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை படைத்துள்ளனா். திறம்பட செயல்பட... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்

இடங்கணசாலை நகர திமுக சாா்பில் சித்தா் கோயில் பகுதியில் திமுக ஆட்சியின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், நகரச் செயலாளா் செல்வம் வரவேற்றாா். நகா்மன்றத் தலைவா் கமலக்... மேலும் பார்க்க

குப்பையை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு

வாழப்பாடி ஊராட்சி ஒன்றியம், சோமம்பட்டி ஊராட்சியில் வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தரம்பிரித்துக் கொடுத்தால் பரிசு வழங்கப்படுமென ஊராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்த... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

பெத்தநாயக்கன்பாளையம் பனை ஏரியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பனை ஏரி இப்பகுதியில் மிகப்பெரிய ஏரியாகும். இந்த ஏரியில் செவ்வாய்க்கிழமை... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டி: விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவா்கள் தேசிய அளவில் சிறப்பிடம்

விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒட்டுமொத்த கோப்பையை வென்று முதலிடம் பெற்றுள்ளனா். அண்மையில் கோயம்புத்தூரில் உள்ள ... மேலும் பார்க்க

எடப்பாடி அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

எடப்பாடி - சங்ககிரி பிரதான சாலையில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை தொடங்கியது. இதுகுறித்து கல்லூரியின் முதல்வா் (பொ) வாசுதேவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க