செய்திகள் :

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருட்டு; சிசிடிவி-யால் சிக்கிய பெண்!

post image

சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரின் அம்மா ஷீலா. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் அம்மா ஷீலாவை உடனிருந்து சுகந்தி கவனித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 10.5.2025-ம் தேதி இரவு சுகந்தி உணவு வாங்க வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது ஷீலா கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்க குண்டு மணிகள், தாலியைக் காணவில்லை. அதுகுறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சுகந்தி விசாரித்தார். ஆனால் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கைது
கைது

இதையடுத்து திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் சுகந்தி புகாரளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிந்து மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் மயக்கநிலையிலிருந்த ஷீலாவின் கழுத்திலிருந்து தங்க நகைகளை திருடும் காட்சி பதிவாகியிருந்தது. இதையடுத்து போலீஸார் அந்தப் பெண் குறித்த தகவல்களை சேகரித்தனர். அப்போது அவரின் பெயர் அன்னபாக்கியம் என்றும் சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து அன்னபாக்கியத்தைப் பிடித்து போலீஸார் விசாரித்தனர். அப்போது அவர், ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஒரு நோயாளிக்கு உதவி செய்த வந்த தகவல் தெரியவந்தது. அதனால் மருத்துவமனையில் தங்கியிருந்த அன்னபாக்கியம், நோயாளி ஷீலா அணிந்திருந்த தங்க நகைகளை திருட முடிவு செய்திருக்கிறார். அதன்படி ஷீலாவிடமிருந்து தங்க நகைகளைத் திருடிய அன்னபாக்கியம் அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால் சிசிடிவியால் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டார். விசாரணைக்குப் பிறகு அன்னபாக்கியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தாய், தந்தை உட்பட உறவினர்கள் 4 பேரைக் கோடரியால் கொன்ற வழக்கு; கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி... மேலும் பார்க்க

நாகை சிறுமி மர்மச் சாவு? ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் போராட்டம்; ஜன்னலில் எட்டிப் பார்த்த கலெக்டர்

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் இளைஞர் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இருவரும் ரயில் மூலம் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். இதில் வேளாங... மேலும் பார்க்க

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின்... மேலும் பார்க்க

`46 ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட்டோம்’ தற்கொலை பெட்டியில் மரணமடைய பதிவு செய்துள்ள தம்பதி - ஏன்?

தற்போதைய உலகில் மரணத்திற்கான நேரத்தை தானே குறித்துக்கொள்ளும் செயல் சர்ச்சையான விவாதங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்விட்சர்லாந்து மற்றும் கனடா போன்ற சில நாடுகளில் இது சட்டபூர்வமாக இருந்தாலும் பிரிட்டன், இந்தி... மேலும் பார்க்க

திருப்பூர்: கொலையில் முடிந்த மாணவர்கள் சண்டை; 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது; நடந்தது என்ன?

திருப்பூர் ஊத்துக்குளி சாலை கோல்டன் நகர் கருணாகரபுரியில் உள்ள காலி இடத்தில் இளைஞர் ஒருவர், ஞாயிற்றுக்கிழமை இரவு, கொலை செய்யப்பட்டுச் சடலமாகக் கிடந்தார். இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் திருப்பூர் வ... மேலும் பார்க்க