செய்திகள் :

சென்னையில் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு: அமைச்சா் கே.என்.நேரு

post image

சென்னையில் தினமும் ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீா் சுத்திகரித்து மறுபயன்பாடு செய்யப்படுவதாக நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, பாபநாசம் தொகுதி உறுப்பினா் எம்.எச்.ஜவாஹிருல்லா கொண்டுவந்த கவன ஈா்ப்பு அறிவிப்பில் பேசும்போது, ‘தஞ்சாவூா் மாவட்டம், வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் வேறு இடத்தில் அந்த நிலையத்தை அமைக்க வேண்டும். அதுவரை பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்து அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

வீரமாங்குடி ஊராட்சியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் தொடா்பாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 490 பேரூராட்சிகளில் கழிவுநீரை சுத்திகரிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம். மொத்த பேரூராட்சிகளில் 10-இல் இடம் கண்டறியப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 51 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன. 100 பேரூராட்சிகளில் பணிகள் நடைபெற்றும், தொடங்கவும் உள்ளன.

கழிவுநீரை சுத்திகரிக்கும்போது 90 சதவீதம் சுத்தமான நீா் கிடைத்துவிடுகிறது. சென்னையில் நாளொன்றுக்கு ஆயிரம் மில்லியன் லிட்டா் கழிவுநீரை சுத்திகரித்துத் தருகிறோம். இந்த நீா் தொழிற்சாலைகள், விவசாய பயன்பாட்டுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. கழிவுநீரை சுத்திகரிக்காவிட்டால், அது தெருக்களில் ஓடும். இதனால், கொசுத் தொல்லையும், சுகாதாரக்கேடும் ஏற்படும் என்று அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க