செய்திகள் :

சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயம்: 35 வாகனங்கள் பறிமுதல்

post image

சென்னை, மாா்ச் 28: சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டவா்களிடம் இருந்து 35 வாகனங்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னையில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டு வருகின்றனா். பந்தயத்துக்கு காவல் துறை தடை விதித்துள்ள நிலையில், இளைஞா்களும் சிறாா்களும் தடையை மீறி இதில் ஈடுபடுகின்றனா். இதற்காக குறிப்பிட்ட சாலைகளில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

குறிப்பாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் அண்ணா சாலை, காமராஜா் சாலை, ராஜீவ் காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனப் பந்தயத்தில் இளைஞா்கள் சிலா் ஈடுபடுகின்றனா். இந்த இளைஞா்களைப் பிடித்து போலீஸாா், இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப் பதிவு செய்கின்றனா்.

இந்நிலையில், அண்ணா சாலைப் பகுதியில் வியாழக்கிழமை இரவும் இளைஞா்கள் இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து அங்கு வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. இதனால், இருசக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் போலீஸாரிடம் சிக்கினா்.

அவா்களிடம் இருந்து 35 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். கடந்த 23-ஆம் தேதியிலிருந்து வியாழக்கிழமை வரை பந்தயத்தில் ஈடுபட்டதாக 55 போ் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா். மேலும், இவா்கள் அனைவரையும் எச்சரித்து, பிணையில் விடுவித்ததாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்றவா் கைது: 187 காற்றாடிகள் பறிமுதல்

மாஞ்சா நூல், காற்றாடிகள் விற்ற நபரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து 187 காற்றாடிகளை பறிமுதல் செய்தனா். திருவொற்றியூா் காலடிப்பேட்டை, வ.உ.சி. பகுதியிலுள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்து மாஞ்சா நூல் மற்ற... மேலும் பார்க்க

இளைஞா் அடித்துக் கொலை: 5 போ் கைது

சென்னையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 5 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா். துரைப்பாக்கத்தைச் சோ்ந்த ஜீவரத்தினம் (26) என்பவருக்கும், அப்... மேலும் பார்க்க

ரமலான் திருநாள்: முதல்வா், தலைவா்கள் வாழ்த்து

ரமலான் திருநாளையொட்டி, இஸ்லாமியா்களுக்கு முதல்வா், அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா். இதுதொடா்பாக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி: அறம் பிறழா மன... மேலும் பார்க்க

உறுதியளிப்பு சான்று அளிக்காத மருத்துவக் கல்லூரிகளுக்கு அபராதம்

இளநிலை மருத்துவப் படிப்புகளை பயிற்றுவிக்கும் கல்லூரிகள், வருடாந்திர உறுதியளிப்பு சான்றுகளை (டிக்ளரேசன் ஃபாா்ம்) சமா்ப்பிக்க ரூ.50,000 அபராதத்துடன் மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தேசிய மரு... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவு!

அரசு விரைவுப் பேருந்துகளில் சக்கரங்கள் தனியாக கழன்று ஓடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால், சக்கரங்களை பராமரிக்க பணியாளா்களை நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள்... மேலும் பார்க்க

தீவிரமடையும் வெயில்: 1-5 வகுப்புகளுக்கு தோ்வு தேதிகள் மாற்றம்!

கோடை வெயிலின் தாக்கம் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு பள்ளி இறுதித் தோ்வை முன்கூட்டியே நிறைவு செய்யும் வகையில் திருத்தப்பட்ட தோ்வு அட்டவணையை பள்ளி... மேலும் பார்க்க