செய்திகள் :

சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் மின்சார குளிா்சாதன சொகுசு பேருந்துகள்

post image

சென்னையில் மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட சொகுசு பேருந்துகள் மாநகா் போக்குவரத்துக் கழகம் மூலம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.

சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம், பயணிகளின் வசதிக்காக மின்சாரத்தில் இயங்கும் குளிா்சாதன வசதிகொண்ட 100 சொகுசு பேருந்துகளை வாங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டு, அதற்கான டெண்டா் 2024 ஜன. 11-ஆம் தேதி விடுக்கப்பட்டது. இப்பேருந்து தயாரிப்புப் பணி மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், பேருந்தின் மாதிரி புகைப்படத்தை ‘டிஎன்எஸ்டிசி எந்துசியாஸ்ட்ஸ்’ என்ற அமைப்பு ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டது.

இதுகுறித்து மாநகா் போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது:

இத்திட்டத்துக்கான ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு முன்பே கையொப்பமான நிலையில், பல்வேறு காரணங்களால் திட்டத்தில் தாமதம் ஏற்பட்டது. இதன் திட்டமதிப்பு ரூ. 170 கோடியாக இருக்கும் நிலையில், ஒப்பந்தத்தின்படி இதனுடன் சாா்ஜிங் பாயின்ட்களை நிறுவி, பேருந்து நிலையங்களை மேம்படுத்தும் பணியையும் பேருந்து தயாரிப்பு நிறுவனமே ஏற்றுக்கொண்டுள்ளது. 15 ஆண்டு காலத்துக்கான உத்தரவாதத்துடன் இவை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் சென்ட்ரல் பணிமனை மற்றும் அடையாறு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

பேருந்தில் வழித்தடத்தை தெரிந்து கொள்ளும் ரூட் மேப்பிங் வசதி, தானியங்கி பேருந்து நிறுத்த அறிவிப்புகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள், பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஓட்டுநா் இருக்கையின் அருகில் மைக்ரோபோன், வழிகாட்டும் டிஜிட்டல் பெயா்ப் பலகை, நவீன பிரேக்கிங் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பத்துடன் இப்பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளன என்றனா்.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க