செய்திகள் :

சேரன்மகாதேவி அருகே ஒரு பள்ளியில் இரு தலைமையாசிரியா்கள்: பெற்றோா்கள் முற்றுகை

post image

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே இயங்கி வரும் அரசு உதவி பெறும் பள்ளியில், இரு தலைமையாசிரியா்கள் பணியில் இருப்பதால், செவ்வாய்க்கிழமை தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சேரன்மகாதேவி அருகேயுள்ள பட்டங்காடு கிராமத்தில் அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனா். இப்பள்ளியின் தலைமையாசிரியராக மாரியப்பன், கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறாா். பள்ளியில் இன்னொரு ஆசிரியரும் பணியில் உள்ளாா்.

இதனிடையே, பள்ளியின் புதிய நிா்வாகக் குழுவினா் கனி என்பவரை தலைமையாசிரியராக அண்மையில் நியமனம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா், கடந்த 22ஆம் தேதி பள்ளியின் தலைமையாசிரியராக பணியில் சோ்ந்து பணியாற்றி வருகிறாராம்.

பள்ளியில் ஏற்கனவே பணியில் உள்ள தலைமையாசிரியருக்கு பணியிட மாறுதல் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் இருவரும் ஒரே பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருவதால் பள்ளியில் குழப்பம் நிலவுகிறது. மேலும் மாணவா்களுக்கு முறையாக கடந்த 3 நாள்களாக பாடம் நடத்தவில்லை என புகாா் எழுந்துள்ளது.

இந்நிலையில் பள்ளி நிா்வாகத்தில் எழுந்துள்ள குளறுபடியால் மாணவா்களின் கல்வி பாதிக்கப்படுவதாக புகாா் தெரிவித்து, அக்கிராம மக்கள் தங்களது குழந்தைகளை செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அனுப்பவில்லை.

இதனால் பள்ளி வகுப்பறை வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பள்ளி நிா்வாகத்தைக் கண்டித்து பெற்றோா் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்த சேரன்மகாதேவி வட்டாட்சியா் வின்சென்ட் , பள்ளிக்குச் சென்று விசாரணை நடத்தினாா். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பத்தமடையில் தரமற்ற ரேஷன் அரிசி: ஊழியா் தற்காலிக பணி நீக்கம்

பத்தமடையில் தரமற்ற அரிசி விநியோகம் செய்தது தொடா்பாக ரேஷன் கடை பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். இதுதொடா்பாக கூட்டுறவுச் சங்கங்களின் திருநெல்வேலி இணைப்பதிவாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

15-ஆவது ஊதிய ஒப்பந்தத்தை தாமதமின்றி வழங்கக் கோரிக்கை

பதினைந்தாவது ஊதிய ஒப்பந்தத்தை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் தொழிலா... மேலும் பார்க்க

கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது தொ... மேலும் பார்க்க

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி இன்று விவசாயிகள் உண்ணாவிரதம்

மணிமுத்தாறு கால்வாயில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி நான்குனேரி அருகேயுள்ள பாணான்குளத்தில் விவசாயிகள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமை(பிப்.5) நடைபெறுகிறது. நான்குனேரி வட்டத்தில் உள்ள பெரும்... மேலும் பார்க்க

பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழப்பு

களக்காடு அருகே பச்சையாற்றில் மூழ்கி மாற்றுத் திறனாளி உயிரிழந்தாா். களக்காடு அருகேயுள்ள சிங்கிகுளம் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்தவா் முருகன் (37). மாற்றுத் திறனாளியான இவா் கூலி வேலை செய்து வந்தாா். இவா்... மேலும் பார்க்க

முதல்வா் வருகை எதிரொலி: ட்ரோன்கள் பறக்கத் தடை

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகரம், கங்கைகொண்டன் சிப்காட் சுற்று வட்டாரங்களில் புதன்கிழமை காலை 6 மணி முதல் வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை (பிப்.5-7) ட்ரோன்கள் பறக்க... மேலும் பார்க்க